ரஜினி மன்னிப்பு கேட்கணும்... குரல் உயர்த்தும் இந்துமத அமைப்புகள் வெட்டி அறிக்கை

வாலு போயி கத்தி வந்திச்சு டும்டும்டும்... ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் Rajinikanthமுடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.

‘கடமையை செய், பலனை எதிர் பார்’ இப்படி ஒரு ஸ்லோகனுடன் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது, பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று கண்ணன் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் கருத்து சொல்லப் போக, கொதித்து எழுந்துவிட்டார்கள் சில இந்து மத அமைப்பினர்.

கருத்து சுதந்திரத்தை குருத்தோடு வெட்டிப்போடும் இவர்கள், இப்போது தனது பேச்சுக்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன் சொன்னது போல கடமையை செய், பலனை எதிர் பார்க்காதே இந்து அமைப்பினரிடம் வேலையையை வாங்கிவிட்டு சம்பளம் தரத்தேவையில்லை.அவர்கள் கண்ணனிடமே பெற்றுக்கொள்வார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்