இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா. பாண்டியன் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக் கிறாரே?


சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் தமிழக முதலமைச்சர் அளித்த பேட்டி

கேள்வி: இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட கட்சிகளில்எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை?

கலைஞர்: கலந்து கொள்ளாத கட்சிகள் என்று கேட்டால், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, .தி.மு.., .தி.மு.., மற்றும்தே.மு.தி.. ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

கேள்வி: அவர்கள் கலந்து கொள்ளாதது பற்றி என்ன நினைக் கிறீர்கள்? அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கருதுகிறீர் களா?

கலைஞர்: அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். அவர்கள் வராதது பற்றி உங்கள்முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கேள்வி: ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லியிருக்கிறார்களே?

கலைஞர்: அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க நான் விரும்ப வில்லை.

கேள்வி: மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றுஎதிர்பார்க்கிறீர்கள்?

கலைஞர்: தீர்மானத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் நேரிலும்சந்திக்கவிருக்கிறோம். 28ஆம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள்மாநிலங்களவை உறுப்பினர்கள் - பிரதமரைச் சந்திப்பது எப்போது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அப்போதும், அதற்குப் பிறகுடிசம்பர் 4ஆம்தேதியன்று என்னுடைய தலை மையில் அனைத்துக் கட்சித்தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்திய அரசு பதில் சொல்லும்

கேள்வி: இலங்கையில் போரையே இந்திய அரசு தான் நடத்துகிறது என்றுவைகோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக் கிறாரே? ஆயுதங்களையெல்லாம்இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து போரையே மறைமுகமாக இந்திய அரசுதான் நடத்துகிறது என்கிறாரே?

கலைஞர்: இதற்கு இந்திய அரசு பதில் சொல்லும்.

கேள்வி: இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா. பாண்டியன் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக் கிறாரே?

கலைஞர்: அது தவறான பொய்யான தகவல். பீதியை கிளப்புகின்ற தகவல். அந்தச்செய்தியைப் பரப்பியவர் தோழர் தா. பாண்டியன். நேற்றையதினம் அதற்கு அரசுசார்பில் ஒரு மறுப்பு வெளியிடப் பட்டுள்ளது. அந்த மறுப்புக்கு மறுப்பாக, இன்றைக்கு அவர்களுடைய பத்திரிகையில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டி ஒருசெய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளவசந்தன் என்பவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை அந்தப் பத்திரிகையில்வெளியிட்டி ருக்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரை வெளியேற்றுவது சம்மந்த மாகஎடுக்கப்பட்ட நடவடிக்கையை, இலங்கை அகதிகள் அனைவருக்கும்அனுப்பப்பட்டதாகச் சொல்லியிருப்பது தவறான கூற்று. அவர்களுடையஜனசக்தி பத்திரிகையில் நான் சொன்னது தவறு என்று கட்டம் கட்டி செய்திவெளியிட்டி ருக்கிறார்கள். இன்று விடியற்காலை 5 மணிக்கு அதை நான் படித்துப்பார்த்து விட்டு, உடனடியாக நீலகிரி மாவட்டத் தினுடைய காவல் துறைகண்காணிப்பாளருக்கு - எஸ்.பி.க்கு போன் செய்து, விரிவான தகவல் கேட்டபோது, அவர் சொன்ன விளக்கம் - வசந்தன் என்பவர் எல்.டி.டி.. இயக்கத்திற்குள்ளேயே முரண்பாடு கொண்ட கருணா குழுவினருக்குதுணையாக இருந்து அந்தப் பகுதியிலே ஏராளமான பணத்தை வசூலித்து செலவுசெய்து வந்தார் என்றும், அவருடைய நடவடிக்கைகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குகுந்தகம் விளைவிப்பதாக இருந்ததால், அவருடைய பதிவை ரத்து செய்து, அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரிமாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு க்யூ பிரிவு, சி.அய்டி., கண்காணிப்பாளரிடமிருந்து அறிவுரை வந்தது என்றும், அதையொட்டித்தான்அவரை வெளியேறுமாறு - இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ்வழங்கப்பட்டது என்றும் கூறினார். இந்த நோட்டீஸ் அவர் ஒருவருக்கு மட்டுமேவழங்கப் பட்டுள்ளது. வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை. நீலகிரிமாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 281 இலங்கை அகதிகளும், சுமார் ஒருஇலட்சம் தாயகம் திரும்பிய இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் வசித்துவருகிறார்கள். இவர்கள் எவருக்கும் இவ்வகையான நோட்டீஸ் எதுவும்வழங்கப்படவில்லை. எல்லோரையும் அழைப்போம்

கேள்வி: அனைத்துக் கட்சித் தலைவர்களையெல்லாம் பிரதமரைச் சந்திக்கடெல்லிக்கு அழைத்துப் போகப் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றையகூட்டத்திற்கு வராத கட்சிக ளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?

கலைஞர்: எல்லோரையும் அழைப்பேன். இன்றைய கூட்டத்திற்கு வரவில்லைஎன்பதற்காக நான் யாரிடமும் கோபித்துக்கொண்டு அழைப்பு அனுப்பாமல்இருக்கமாட்டேன்.

கேள்வி: இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் முறையாகத்தமிழர்களுக்குக் கிடைக்காமல் ராணுவம் தடுப்பதாக செய்தி வந்ததே?

கலைஞர்: இன்று காலையில் கூட முறையாக வழங்கப் படுவதாக செய்தி வந்தது. ஆனால் தவறு நடப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டது சரியல்ல.

கேள்வி: இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக உதவி நிதி திரட்டியதில் எந்தெந்தகட்சிகளின் சார்பில் நிதி அளிக்கப் பட்டது?

நிதி கொடுத்தவர்கள்

கலைஞர்: தி.மு.., இந்திய தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர்கழகம், விடுதலை சிறுத்தைகள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம், .மா.மு.., புதிய தமிழகம், சமூக நீதி இயக்கம், தமிழ் மாநில தேசிய லீக், சுப வீரபாண்டியனுடைய திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் கலைத் துறை சார்பில், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எல்லாம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கை போன்ற சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாட்டைமதிக்காததற்கு என்ன காரணம்?

கலைஞர்: டெல்லிக்குச் செல்லும் போது அதைப்பற்றி யெல்லாம் விரிவாகப்பேசுகிறோம்.

கேள்வி: இன்றைய கூட்டத்திற்கே வராத கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்றஉறுப்பினர்களும், தலைவர்களும் நீங்கள் பிரதமரைச் சந்திக்கச் செல்லும்போதுவருவார்களா?

கலைஞர்: நான் எதிர்பார்ப்பது தவறல்ல.

கேள்வி: வெளி உறவுத் துறை அமைச்சர் இதற்காகவே தங்களைச் சந்திக்கவந்தபோது சில உறுதிமொழிகளையெல்லாம் கொடுத்தார். அதன் மீதுநடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

கலைஞர்: மீனவர்கள் சுடப்பட்டு வந்த சம்பவங்கள் நின்றி ருக்கின்றன. பட்டினிகிடக்கின்ற தமிழக மக்களுக்கு உணவு, அவர்களுடைய தேவைகளுக்கான உடை, மருந்து போன்ற சாத னங்கள் எல்லாம் தங்கு தடை இல்லாமல் மத்திய அரசின்தூண் டுதல் காரணமாக இலங்கைத் தமிழர் களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கெல்லாம் மேலாக உள்ள குறைபாடு போர் நிறுத்தம்நடைபெறவில்லையே என்பது தான்.

ஜெயலலிதாவின் பரிதாப உணர்வு!

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டுதீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள், நிதி வசூலித்துக் கொடுக்கிறீர்கள், விரைவாக நடவடிக்கை எடுக்க முயலுகிறீர்கள். ஆனால் ஜெயலலிதா நீங்கள்பதவி விலக வேண்டுமென்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறாரே?

கலைஞர்: என் மீதுள்ள பரிதாபம் தான் காரணம். இவ்வளவு கஷ்டப்படுகிறாரேஎன்பதற்காகத் தான் அவர் அப்படி கூறுகிறார்.

கேள்வி: மத்திய அரசு கடுமையாகச் செயல்பட வேண்டு மென்றுசொல்லியிருக்கிறீர்கள். தி.மு. கழகம் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று அவர் களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகசொல்லலாம் அல்லவா?

கலைஞர்: இப்போதுள்ள மத்திய அரசிடம், அந்த அளவிற்கு மிரட்ட வேண்டியஅவசியம் ஏற்படவில்லை.

கேள்வி: அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட வில்லைஎன்கிறார்களே?

அகதிகளுக்குத் தமிழக அரசு செய்யும் உதவிகள்

கலைஞர்: அது தவறு. இரண்டாண்டுகளுக்கு முன்பே நாங்கள் ஆட்சிக்குவந்தபோதே - எல்லா அமைச்சர்களையும் ஒவ்வொரு முகாமுக்கும் அனுப்பிஅவர்களுக்கு மத்திய அரசிலிருந்து வழங்கப்படும் தொகை குடும்பத்தலைவருக்கு மாதந்தோறும் 200 ரூபாய் என்றிருந்ததை 400 ரூபாயாக 2006இல்உயர்த்தினேன். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோ ருக்கும் 144 ரூபாய்என்று இருந்ததை 288 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தோம். இப்படி உயர்த்திக்கொடுத்த 144 ரூபாய் தமிழக அரசின் சார்பில் தரப்பட்டதாகும். மத்திய அரசுகொடுத்தது வெறும் 144 ரூபாய் தான். அதைப் போலவே குடும்பத்தில் உள்ளமுதல் குழந்தைக்கு மத்திய அரசு கொடுத்தது 90 ரூபாய் தான். நாங்கள் அதை 180 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தோம். முதல் குழந்தை அல்லாத மற்றகுழந்தைகளுக்கு மத்திய அரசு கொடுத்த 45 ரூபாய் என்பதை மேலும் 45 ரூபாய்சேர்த்து 90 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கேயுள்ள டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின்கீழ் - முகாம்களில் உள்ளகர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும் என்று ஆணை பிறப்பித்து, நடைமுறைப்படுத்தினோம். அவர் கள் சமையல் பாத்திரங்கள் வாங்க இரண்டுஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்கனவே 150 ரூபாய்வழங் கப்பட்டதற்கு மாறாக 250 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தோம். அவர்கள்வீட்டில் ஈமச் சடங்குகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு மத்தியஅரசு 100 ரூபாய் வழங்கிக் கொண்டிருந்தது. அதை 500 ரூபாயாக உயர்த்திக்கொடுத்தோம். முகாம்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைமணி நேரத்திற்கு மட்டுமே மின்சாரம் எனும் நிலையை மாற்றி, 24 மணிநேரமும் மின் விநியோகம் செய்யப்பட ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் 2004-2005ஆம் ஆண்டில் அகதிகள்முகாம்களுக்கு மொத்தம் செலவிடப்பட்ட தொகை 28 கோடி ரூபாய் என்பதற்குமாறாக, இப்போது 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் என்றுசெலவிடப்படுகிறது. 12

கேள்வி: இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பா... கலந்து கொண்டுள்ளது. பா... விற்கும், தி.மு.. விற்கும் இடையே இருந்த பிணக்குத் தீருவதற்கான வாய்ப்புஉருவாகியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? ஏனென்றால் அவர்களைமுன்பு தோழமையிலிருந்து விலக்கியிருந்தீர்களே?

கலைஞர்: எங்களுக்குள் ஏதும் தகராறு ஏற்படவில்லை. விலக்கியதாகச்சொல்வதெல்லாம் தவறு. அப்படிக் கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்கிற அளவிற்கு நாகரிகமற்றவர்கள் அல்லநாங்கள். எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டோம். அவர் கள்தங்களுடைய நிலைமையை விளக்கினார்கள். அவ்வளவு தான்.

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் நிவாரணத்திற்காக அனுப்பப்பட் டுள்ளது?

கலைஞர்: இதுவரை ஏறத்தாழ பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைஅனுப்பியிருக்கிறோம்.

கேள்வி: தற்போது இலங்கையிலே அதிபராக உள்ள ராஜபக்ஷே இருக்கிற வரைஇலங்கை பிரச்சினை தீராது என்று சொல்வதைப் பற்றி?

கலைஞர்: அது நம்முடைய ஆற்றல், அறிவு, வைராக்கியம், தமிழர்களுடையஒற்றுமை ஆகியவற்றைப் பொறுத்தது.

கேள்வி: இலங்கையிலே தனி நாடு உருவாவதற்கான சாத்தியக் கூறுஇருக்கிறதா?

கலைஞர்: அதையெல்லாம் நான் யூகித்துச் சொல்ல முடியாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை