இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்

படம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்   மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட். அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை? ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். இப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம். ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே

கைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்

படம்
பிற‌வி‌யிலேயே  இரு கைகளையும் இழந்த மாணவி, காலால்  ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த ் தேர்வு எழுதினார்.  திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ. இவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  ப‌த்தா‌ம் வகு‌ப்பு  படித்து வந்தார். நே‌ற்று  தமிழ்நாடு முழுவதும்  ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வ ு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. முக ைய ூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார்.  மற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித

பாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு!

படம்
1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.  2001 ... 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக. ஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக. காரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு  ராஜ்யசபா  சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ். அடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து திமுக கூட்டணிக்கு வந்தார். 2004... 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

படம்
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன்.  வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி:  "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்த

ஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்

படம்
சென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார். அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-

காதலில் விழ மாத்திரை

படம்
ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம். கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம். இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும். காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள். காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்த

ஆண்கள் விரும்பும் ஈர முத்தம்!

படம்
ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது.  முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்த

செக்ஸ்: இந்தியர்கள் செம திருப்தி!

படம்
செக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு. இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது). மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்ல

ரொமான்ஸுக்கு ரெட்!

படம்
தலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம். சிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள். நியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர். பெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம். இதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். சிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக

மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்

படம்
மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.  அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.    மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்

இங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம் பிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.  பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா.

படம்
அயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது. webdunia photo WD அயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாத ி‌ ர ி? கால ே‌ஜ்  ஸ ்ட ூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு ந ேர ா சொல்கிற  தை‌ர ியமான கேரக்டர். இந்த கேரக் ட‌ர ில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த்,  ச ூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம். பையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...? நயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு  தெ‌ர ியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது. தெலுங்கிலும் நடிக்கிறீர்களாமே...? ஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்.

கோடை வெப்பத்தை தணிக்க

கோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும். ஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதிர்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம். இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். கோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்: தண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும். கண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும்.  பகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும். இளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும். முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செ

நான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம்.

படம்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இப்போது வீட்டு வாடகை நியூயார்க், லண்டன்  வாடகையை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு போய் விட்டது. அப்படியே கொடுக்கத் தயாராக இருந்தாலும் வீடு கிடைப்பதில்லை. குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், வெளியூர் பெண்களுக்குத்தான் வீடு கிடைப்பது பெரும் குதிரைக் கொம்பாகியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஜொள்ளும், லொள்ளுமாக கிளம்பி விட்டனர். எப்படி..? உங்களுக்கு நாங்கள் வீடு அல்லது அறை தருகிறோம். நீங்கள் எங்களுக்கு வாடகை தரத் தேவையில்லை. உங்களை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டு விளம்பரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் ஜொள்ளு பார்ட்டிகள். பல்வேறு இணையதளங்களில் ஆளுக்குப் பாதி வாடகைக்கு என்ற பெயரில் வரும் விளம்பரங்களும் கூட இதே டைப்பிலானவைதான். அதாவது ஆளுக்கு பாதி வாடகையைத் தருவோம் என்று கூறி இளம் பெண்களை இழுக்கும் ஆண்கள், ஆள் கிடைத்தவுடன், வாடகையே தர வேண்டும், உங்களைத் தந்தால் மட்டும் போதும் என்று கூறுகிறார்களாம். இதுபோன்ற விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என சிட்னியில் சிலர் குரல் எழுப்பினர். ஆனால் சட்டத்திற்கு

இப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை

படம்
: அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளை இழுக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். மீண்டும் திருமாவளவனுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிட

ஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'!

பீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது. பீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பிரித்துக் கொள்வதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிககும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதை காங்கிரஸ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. பிரச்சினை தீர்ந்து சுமூகமாக பிரிவினை ஏற்படும். நமக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என காங்கிரஸ் காத்திருந்தது. ஆனால் லாலு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் காங்கிரஸுக்கு. பாஸ்வானுக்கு 12, நமக்கு 25 என அறிவித்த லாலு, காங்கிரஸுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார். இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. லாலு பிரசாத் யாதவ் நம்பி்க்கைத் துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவி்த்தார். இந்த நிலையில் பீகாரில் லாலு கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் அது போட்டியிடும் எனத் தெரிகிறது

நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்

படம்
நடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார் நடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது.  சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம், அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

படம்
வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும். சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும். அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். பாச மலர் -  என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும். உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். முதல் மரியாதை -  ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள். நாயகன் -  நீங்க நல்லவரா? கெட்டவரா? மணிரத்னம் பட வசனங்களில் ஒரு த