நயன் கேட்ட இரண்டு கோடி மிரண்டு பின்வாங்கிய ஹீரோ

நயன் கேட்ட இரண்டு கோடி
மிரண்டு பின்வாங்கிய ஹீரோ

இதென்ன மருதமலைக்கு வந்த சோதனை? மருதமலை உள்ளிட்ட எத்தனையோ Nayantharaவெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. திருவண்ணாமலைக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேளுங்களேன் என்றாராம்.

விரும்பிய சீட்டை எடுப்பதுதானே குருவியின் வேலை? அர்ஜுனின் சொல்லை சிரமேற்கொண்டு செயல்படுத்த நினைத்த தொண்டரடிப் பொடிகள், நயன்தாராவையே நேரடியாக அப்ரோச் செய்தார்களாம். விஷயத்தை சொன்னவர்களிடம், நயன்தாரா கேட்ட தொகைதான் கிறுகிறு...

இரண்டு கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்றாராம். லிங்குசாமியின் படம் தாமதம் ஆவதால், மும்பைக்கே போய் ரெஸ்டில் இருக்கும் நயன், மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிடுவது என்ற வெறியில் இருக்கிறார். இந்த நேரத்தில் அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் ஒப்புக் கொள்வாரா? அதனால்தான் இப்படி ஒரு சம்பளத்தை கேட்டு மிரட்டியிருக்கிறார்.

இப்படி கேட்டதற்கு பேசாமல் நடிக்க விருப்பம் இல்லை என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே என்று முணுமுணுக்கிறது அர்ஜுன் தரப்பு. ஆக்ஷனுக்கே ஆக்ஷனா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்