அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


வாஷிங்டன் : அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியைசமாளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள்உருவாக்கப்படும் என்று, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக்ஒபாமா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நேற்று வாஷிங்டன்னில் வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் வாராந்திர அறிக்கையில் ஒபாமா கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரம்மீண்டும் சரியாமல் இருப்பதற்கு, விரைவும், துணிவும் மிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.



இதற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைதயாரிப்பதற்கு எனது ஆலோசகரிடம் தெரிவித்துள்ளேன். இந்த திட்டம் ஒரேயடியாக செயல்படுத்த முடியாது. இதுஒரு நீண்ட கால திட்டமாகும். இந்த திட்டத்தினால் குறுகிய காலத்திற்கு அல்லாமல் நீண்ட காலங்கள்பொருளாதாரத்தை பிடித்து நிறுத்துவதாக அமையும்.பொருளாதார சரிவை மீட்பதற்கு கடுமையான தடைகளை எதிர்கொள்ளவேண்டும். அதற்குறிய அடிப்படை திட்டங்களை தயார் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்ததிட்டங்களால் நல்ல வளர்ச்சி காணவேண்டும்.குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் சேர்ந்து ஆதரவும், ஆலோசனையும் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.இவ்வாறு ஒபாமா கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை