அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் 10 சதவிகிதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவேண்டும்
ஒரு வரிச் செய்திகள்
- அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு கள் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை 10 சதவிகிதம் அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி அருகே போலீசாரை தாக்கி, தப்ப முயன்ற ரவுடி கோபியை போலீசார் சுட்டதில் ரவுடி உயிரிழந்தார்.
- சென்னையில் ரூ. 20 கோடி செலவில் முக்கிய இடங்களில் 800 சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறு வதாக மேயர் மா. சுப்பி ரமணியன் தெரிவித்தார்.
- தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங் களூருக்கு 10 விரைவு பேருந்துகளை இன்று (நவ. 17) முதல் இயக்கப்பட உள்ளது.
- புதிய தொலைக் காட்சி அலைவரிசை அல் லது வானொலி அலை வரிசை தொடங்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்க தொலைத் தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மறுத்துள்ளது.
- இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 1700 டன் உணவு மற்றும் நிவாரண பொருள்கள் ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சென்ற டைந்தது; சுங்கத்துறை சோதனைக்குப் பின் செஞ் சிலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வத்தொண்டு நிறுவ னங்கள் மூலம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
- கிராமப்புற மக்க ளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க செய்வதற்கான ஆராய்ச்சி திட்டத்தில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
- அயக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சீர் திருத்தக் குழு உறுப்பினராக ரிசர்வ் வங்கி முன்னாள் உறுப்பினர் ஒய்.வி. ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
- செரிமான சக்தி குறை வாக உள்ளவர்கள் சோம்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வி.எச்.பி.யின் விஷமம்!
மும்பை பயாண்டர் பகுதியில் உள்ள கிறித்துவ தேவாலயம் ஒன்றை விசுவ ஹிந்து பரிஷத் கும்பல் தாக்கியுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவ பரிஷத் அல்ல, விஷம பரிசத் என்பதே உண்மை.
கருத்துகள்