போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா,; போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.


'வைஜெயந்தி ஐபிஎஸ்'சின் ரீமேக்கான 'பவானி'யில் போலீஸ் அதிகாரி வேடமேற்கும் சினேகா, இதற்காக தனது மேனரிஸங்களை ரொம்பவே மாற்றிக்கொண்டு வருகிறாராம்.

இதற்காக, தனது இயல்பான புன்னகையை மறந்து௦ எப்போதும் முறைத்த பார்வையும், விரைத்த நடையுமாக இருக்க பழகிக்கொண்டிருக்கிறார் சினேகா.

இந்நிலையில், அவருக்கு கோபத்தை தூண்டும் வகையிலேயே படப்பிடிப்பில் பலவிதமான சம்பவங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் பாளையங்கோட்டை ராமர் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினர், கோவில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.

முறைப்படி அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று இயக்குனர் ஆர்த்தி குமார் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் ரொம்பவே தொல்லை கொடுக்க, போலீசார் வந்து இந்து முன்னணியினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்