இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார்

படம்
வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார். அவரும் ஒன்றரைக் கோடி வரை கேட்டு சிம்பு தேவனை அதிர வைத்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாதிரி இன்னொரு படத்தை இவர்களை வைத்து எடுத்துவிடலாம் என்று கனவு கண்ட சிம்பு தேவன், ஒரு வழியாக உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். இந்த இரு பெரும் நகைச்சுவை திலகங்களைத் விட்டுவிட்டு, லாரன்ஸ் பக்கம் போய்விட்டாராம். கதையைக் கேட்ட லாரன்ஸ், சம்பளம் ஒரு பொருட்டே அல்ல. படத்தை எப்போ ஆரம்பிக்கிறீங்க என்று கேட்க, இவரல்லவோ கலைஞன் என்கிறார் சந்தோஷக் கூச்சலோடு

நான் ரசித்த கவிதைகள்.

படம்
நான் ரசித்த கவிதைகள். 1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய். 2 . பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை, தினமும் தன் கணவன் படத்திற்கு. 3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா? தீக்குச்சி 4.அம்மண சிறுவன் கீழே, வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி. 5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன் நிலவை அசைத்தான் குளத்தில். இது எப்படி இருக்கு? இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது , இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!

கொஞ்சம் சிரிங்க,அப்பா 5 + 5 எவ்வளவு?

படம்
நன்றி : sms அனுப்பிய அனைத்து நண்பர்கள் மற்றும் cvag, டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா ” எந்த அளவுக்கு பாக்குறாங்க ? ” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!! சார் , டீ மாஸ்டர்டீ போடறாரு , பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு , மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு , நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?… என்னதான் கிளி கீ .. கீ .. என்று கத்தினாலும் , அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது . ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை , அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது . அதுக்கு ” சிங் - சாங் - பங் ” குன்னு பேர் வச்சாங்க . இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது . அதுக்கு ” ரீங் - சாங் - சிங் ” குன்னு பேர் வச்சாங்க . ஆனா … மூணாவதா பிறந்த குழந்தை , நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது . அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க ? ” தெரியலையே ”” சம் - திங் - ராங் ” குன்னு . ” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ” ” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ” ஒரு காப்பி எவ

இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார்.

படம்
மேலும் புதிய படங்கள் இன்று ரஜினியின் 59வது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை தொலைபேசி மூலம் வாழ்த்தினார். இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் உள்ள நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் வழக்கமான அளவில் இல்லை. மேலும் ரஜினியும் இன்று ஊரில் இல்லை. ஹைதராபாத்தில் நடந்து வரும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந் நிலையில் முதல்வர் கருணாநிதி, ரஜினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தி.நகர் பகுதியில் ரஜினிகாந்த்தின் பிரமாண்ட கட் அவுட்டும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை ரசிகர்கள் கோவில்களில் விசேஷ வழிபாடுகள், பூஜைகள

ஜமாத் உத் தாவா;தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை

படம்
தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது, அதன் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் எல்லாம் உதவாது. அந்த அமைப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வேலைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது. டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஜான் நெக்ரோபாண்டேவிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசுடனும் பிரணாப் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவிடம் பிரணாப் விளக்கம்: அவர்களிடம், லஷ்கர் ஏ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பதாலோ, அதன் சில அலுவலங்களுக்கு சீல் வைப்பதாலோ மட்டும் நிலைமை மாறிவிடாது, அவர்கள் தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை என்பதை முகர்ஜி சுட்டிக் காட்டினார் . தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் நெக்ரோபாண்டே சந்தித்துப் பேசினார். ஜெர்மன் அமைச்சர் வருகை: இதற்கிடையே ஜெர்மன் உள்துறை அமைச்சர்

யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா

படம்
யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும்பினால் தன்னை இலங்கை அரசு கொலை செய்து விடும் என்பதால் தான் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிவாஜிலிங்கம் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தனக்கு இந்திய அரசிடம் இருந்து இதுபற்றி தகவல் ஏதும் வரவில்லை என்றும், இது இலங்கை அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளியாக இருக்கலாம் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் இணைய

போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. பா.நடேசன்

படம்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது? சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர்.

இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.

படம்
இரு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசி அவர்களது வாழ்வைக் கெடுத்த 3 வாலிபர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ககதிய இன்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் பயிலும் ஸ்வப்னிகா, பிரனீதா ஆகியோர் தங்களது டூ வீலரில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை பைக்கில் வந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய், ஹரிகிருஷ்ணா, ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் வழிமறித்து ஆசிட் ஊற்றிவிட்டுத் தப்பினர். இதி்ல் இரு மாணவிகளின் முகம், உடல் வெந்துபோனது. இருவருமே மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களையும் ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு நேற்றிரவு விசாரணைக்காக கொண்டு சென்றனர். எந்த இடத்தில் வைத்து ஆசிட் ஊற்றினார்களோ அதே இடத்தில் வைத்து மூவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மூவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் சுட்டிக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்டது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர் ர

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி

படம்
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி 90 சிங்களச் சிப்பாய்கள் பலி ; காயமடைந்த 180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர் . 180 பேர் காயமடைந்தனர் . இதனால் ராணுவம் பின்வாங்கியது . இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர் . விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்த மாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது . இந்தத் தாக்குதலின்போது , விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும் நெருங்க முடியவில்லை . கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல் விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . 2 நேற்று முன்தினம்

நயனதாரா போனால் போகட்டும், வேறு ஹீரோயினைத் தேடிக் கொள்கிறோம்

படம்
நயனதாரா போனால் போகட்டும் , வேறு ஹீரோயினைத் தேடிக் கொள்கிறோம் என்று பையா படத் தயாரிப்பாளர் போஸ் தெரிவித்துள்ளார் . லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார் . அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் . லிங்குசாமியின் அண்ணன் போஸ் தயாரிக்கும் படம் இது . இப்படத்தில் நடிக்க ரூ 1 கோடிக்கும் அதிகமாக நயனதாராவுக்கு சம்பளம் பேசப்பட்டது . இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு அதிக சம்பளம் தராததால் இது தமிழ் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் , சம்பளத்தை குறைக்கக் கூறியதால் லிங்குசாமி படத்திலிருந்து விலகுவதாக நயனதாரா அறிவித்தார் . இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது . இதுகுறித்து தயாரிப்பாளர் போஸ் கூறியதாவது : நயனதாராவுக்கு தருவதாக ஒப்புக்கொண்ட சம்பளத்தை , சமீபத்தில் குறைத்துக்கொள்ள சொன்னது உண்மைதான் . அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை . சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்களின் வசூல் 50 சதவீதம் குறைந்திருக்கிறது . அதேபோல் வியாபாரமும் பாதியாக குறைந்திருக்கிறது . என

Anjathey அஞ்சாதே | பூ | சுப்ரமணியபுரம் சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழாசுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ

படம்
அஞ்சாதே | பூ | சுப்ரமணியபுரம் சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன. சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன. இதுகுறித்து சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் துணைத் தலைவர் எஸ்வி சேகர் கூறியதாவது: இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி. டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். இதுவரை நடந்த திரைப்பட விழாக்களை சற்று சிரமத்துடன்தான் ஏற்பாடு செய்தோம். ஆனால் இந்த முறை அரசு உதவி கிடைத்ததால் சற்று நிம்மதியாக ஏற்பாடு செய்துள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இதுபோ

ஷக்தி சிதம்பரம் மோசம்: ஸ்னிக்தா;அவரும்தான் மிக மோசமாக நடந்து கொண்டார். அசிங்கமாகப் பேசினார்

படம்
விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தந்தால்தான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என ஸ்னிக்தா மிரட்டியதாக இயக்குனர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்னிக்தாவோ, இயக்குநர் நடவடிக்கை மிக மோசம் என்று புகார் தெரிவித்துள்ளார். அஞ்சாதே படத்தில் கத்தாழ கண்ணால... பாடலுக்கு ஆடியவர் ஸ்னிக்தா. லாரன்ஸ் ஜோடியாக 'ராஜாதி ராஜா' படத்தில் நடித்து வருகிறார். ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். இந்நிலையில் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் தராததால் 3 மணி நேரம் ஏர்போர்ட்டில் அமர்ந்து கொண்டு, இயக்குனரை மிரட்டியதாக அப் படக்குழு மற்றும் இயக்குநர் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'ராஜாதி ராஜா' பட இயக்குனர் தரப்பில் பத்தரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதுவரை ஒரு படம் கூட நாயகியாக நடிக்காதவர் ஸ்னிக்தா. ராஜாதி ராஜாதான அவருக்கு முதல் படம். இப்படத்தில் ஸ்னிக்தா தவிர மேலும் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனாலும் ஸ்னிக்தா கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சம்பளமும் அதிகம் கொடுத்துள்ளோம். இருந்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பம் முதலே பிரச்னை செய்து

தலிபான்கள் அதிரடி தாக்குதல்-150 நேட்டோ வாகனங்கள் எரிப்பு-3 பேர் பலி

வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர். அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன. இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர். டேங்கர்கள், லாரிகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். மொத்தம் பத்து ராக்கெட்களை வீசியும், பெட்ரோல், மண்ணெண்ணையைக் கொண்டும் இந்த தாக்குதலி்ல அவர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் டிப்போ வாட்ச்மேன் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். நேட்டோ படையினர் மீது தலிபான்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள்;இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா;கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி

படம்
தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார் . நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி : இலங்கை ராணுவ தளபதி தமிழக அரசின் தலைவர்களை கோமாளிகள் என்று கூறியிருக்கிறாரே ? கருணாநிதி : அப்படி இலங்கை தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது . இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் அடிப்படையில் ஒருவரை பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு . ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழக தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாது . அப்படி விமர்சித்திருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது . கேள்வி : இதை நீங்கள் பிரதமர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே ? கருணாநிதி : இலங்கை ராணுவ தளபதி கூறியது பத்திரிகையில் வந்துள்ளது . ராமதாஸ் கூறிய கருத்தும் இந்நேரம் பிரதமருக்குத் தெரிந்திருக்கும் . கேள்வி : இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த

அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக

படம்
அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக மத்திய பிரதேசம் , சட்டீஸ்கரில் மட்டுமே பாஜக ஆட்சி இடதுசாரிக் கட்சிகளின் முயற்சிக்கு மூக்கறுப்பு டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் , சட்டிஸ்கர் , மத்தியப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவற்றில் டில்லி , ராஜஸ்தான் , மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த பாஜகட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது . சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசும் பாஜகட்சியும் சமபலத்தில் இடங்களைப் பெற்றுள்ளன . இந்த மாநிலத்தில் பாஜகட்சி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலை யில் மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகமே ! மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே மதவெறிக்

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்

படம்
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக் கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல் மைக்கல் முல்லன் கூறியுள்ளார் . பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம் . கே . நாராயணனிடம் முல்லன் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன . பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி , ராணுவத் தளபதி , ஐஎஸ்ஐ தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது . அப்போது மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர் கூறினர் . ஆனால் , அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களை முல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஏ தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ , ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர் . இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி ,

ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

படம்
தீவிரவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை கொடியசைத்து துவங்கி வைக்க சம்மதித்திருந்தார் த்ரிஷா. சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பாங்காக் போயிருந்தார் த்ரிஷா. இவருக்கு ஜோடி நாகார்ஜுன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திற்கு வந்து பார்த்தால், பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியதாம்! அச்சச்சோ என்று பதறியவரிடம், அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விபரத்தை கூறினார்களாம். பாங்காக் நாட்டில் அரசியல் குழப்பம். அந்நாட்டு தலைமையை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்ட, திறந்திருந்தால்தானே மிரட்டுவார்கள் என்று முடிவு செய்த போலீஸ், விமான நிலையத்தையே மூடிவிட்டது. அடித்து பிடித்துக் கொண்டு புக்கட் தீவுக்கு வந்து சேர்ந்த த்ரிஷா, அங்கிருந்து கோலாலம்பூரில் ஃபிளைட் பிடித்து சென்னையில் இறங்கினாராம். இப்படியெல்லாம் ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன்.

படம்
யார் யாரோ ஒட்ட பார்த்தார்கள். ஆனாலும், திசைகள் போலவே திருப்பிக் கொண்டு நிற்கிறார்கள் வைரமுத்துவும், இளையராஜாவும். இது வாரிசுகளின் காலம். அப்பாவின் கோபமும், பிடிவாதமும் பிள்ளைகளை என்ன செய்யும்? “இதுவரைக்கும் யாருமே ட்ரை பண்ணலே, வேணும்னா யாராவது டைரக்டர்கள் முயற்சிக்கட்டும். வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன். இந்த நல்ல காரியத்தை எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைக்கப் போகிறாரோ? அதிருக்கட்டும்... ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து விலகிக் கொண்ட யுவனிடம், அப்படத்திற்காக போட்டுக் கொடுத்த இரண்டு பாடல்களையும் திருப்பி கொடுத்துவிட்டாராம் செல்வராகவன். ட்யூனை பயன்படுத்தாமல் விட்டதோடு, பாடல் வரிகளையும், ட்யூனையும் நா.முத்துக்குமாருக்கும், யுவனுக்கும் தபால் மூலம் திருப்பி அனுப்பிவிட்டாராம். மாறாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்திருக்கிறார். முதல் படத்திலிருந்து நேற்றுவரை இளம் கவிஞர்களிடம் மட்டுமே பாடல் வாங்கி பழகிய செல்வா, முதன் முதலாக ஐம்பதை தொட்டவரிடம் பாடல் வாங்குவது ஆச்சர்யம்தான். வயசு போனால் என்ன? வரிகள் இளமையா

பீதி அடைந்த ஒரு பெண் பயணி, லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பிய தகவல்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நடந்ததாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின்போது, பீதி அடைந்த ஒரு பெண் பயணி, லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பிய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பயணிகள் பீதியடைந்து ஓடியுள்ளனர். அப்போது ஒரு பெண் சூட்கேஸ் உள்ளிட்ட லக்கேஜ்களை அனுப்பும் கன்வேயர் பெல்ட் மீது ஏறி தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தப் பெண் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கன்வேயர் பெல்ட் மீது ஏறி விட்டார். இதைப் பார்த்த நாங்கள் அவர் லக்கேஜ் சேகரிக்கும் இடம் வரை வருவதற்கு அனுமதித்தோம். அதன் பின்னர் மின் இணைப்பைத் துண்டித்தோம். அந்த இடத்தில் அவரை பாதுகாவலர்கள் பத்திரமாக இறக்கி விட்டனர். கன்வேயரை பாதியிலேயே நிறுத்தியிருந்தால், அவரை மீட்பது சிரமமாயிருக்கும். எனவேதான் லக்கேஜ் சேகரிப்பு இடம் வரை வர அனுமதித்தோம். கன்வேயர் பெல்ட்டில் ஏறி வந்ததால் அந்தப் பெண

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவாலிஸ் காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதாக பயணிகள் கூறியதால் பெரும் பீதி ஏற்பட்டது . இதையடுத்து அங்கு கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டனர் . இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு போன் வந்தது . அதில் பேசிய பயணிகள் , விமான நிலையத்திற்குள் ஒரு குவாலிஸ் கார் வந்தது . அதில் இருந்த நபர்கள் , காரிலிருந்தபடியே சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடி சென்றனர் என்று கூறினர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது . உடனடியாக கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர் . விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது . விமான நிலையத்திற்கு வருகிற அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன . இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியான உதயன் பானர்ஜி கூறுகையில் , சில பயணிகளிடமிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக எங்களுக்குப்