வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார்
வடிவேலு நாலு கோடி கேட்டதால் அதிர்ந்து போன சிம்பு தேவன், விவேக்கிடம் போனார். அவரும் ஒன்றரைக் கோடி வரை கேட்டு சிம்பு தேவனை அதிர வைத்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மாதிரி இன்னொரு படத்தை இவர்களை வைத்து எடுத்துவிடலாம் என்று கனவு கண்ட சிம்பு தேவன், ஒரு வழியாக உறக்கம் கலைந்து எழுந்துவிட்டார். இந்த இரு பெரும் நகைச்சுவை திலகங்களைத் விட்டுவிட்டு, லாரன்ஸ் பக்கம் போய்விட்டாராம். கதையைக் கேட்ட லாரன்ஸ், சம்பளம் ஒரு பொருட்டே அல்ல. படத்தை எப்போ ஆரம்பிக்கிறீங்க என்று கேட்க, இவரல்லவோ கலைஞன் என்கிறார் சந்தோஷக் கூச்சலோடு