வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி


வடிவேலு கேட்ட நாலரை கோடி
ஆளை மாற்றிய சிம்புதேவன்

ப்ரீயா இருந்தா வாடா மச்சான், இங்கே ஒருத்தன் சிக்கியிருக்காங்கிற ரேஞ்சுக்கு Vadiveluபுண்ணாக்கிவிட்டது வடிவேலுவின் ஹீரோ ஆசை. போதும்டா சாமி என்று ஒதுங்கிப் போனவரை மறுபடியும் இழுத்து வர முயற்சித்திருக்கிறார் சிம்புதேவன். இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் மூலம், வடிவேலுவின் யானை பலத்தை ரசிகர்களுக்கு நிரூபித்தவர் சிம்புதேவன்.

இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் ஹீரோவாக நடிக்க சம்மதித்தார் வடிவேலு. இதற்கு அவர் கேட்ட சம்பளம்தான் தலையை ரங்கராட்டினம் போல் சுற்ற வைக்கும் சமாச்சாரம். நான் இந்த படத்தில் நடிக்க வந்தால், சுமார் பத்து படங்களையாவது இழக்க வேண்டி வரும். எனவே சம்பளமாக நாலரை கோடி கொடுத்துவிடுங்கள் என்றாராம்.

அறை எண் 305 க்கு பிறகு சிம்புதேவனுக்கு படம் கிடைத்ததே பேரதிர்ஷ்டம். இதில் Vivekவடிவேலுவுக்கு நாலரை கோடி என்றால்? குதிரையில் ஏறி தப்பிக்காத குறையாக ஓடிப்போனது தயாரிப்பு தரப்பு. சரி, வடிவேலுவே வேண்டாம். விவேக்கை வைத்து ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தார் சிம்புதேவன்.

கதையை கேட்டு சந்தோஷப்பட்ட விவேக் சம்பளமாக கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி! இப்படியெல்லாம் படம் எடுத்து கலைசேவை செய்ய வேண்டுமா என்று தாவாங்கட்டையை சொறிய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை