ரசிகர்கள் அனுப்பிய 30 ஆயிரம் தந்தி பெருமைப்படுகிறார் விஜய்

ரசிகர்கள் அனுப்பிய 30 ஆயிரம் தந்தி
பெருமைப்படுகிறார் விஜய்

அரசியல் ஆசை நடிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? ரசிகர்களுக்கு Vijayஇருக்கிறது. லேட்டஸ்டாக தனது ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கும் விஜய், பொதுநல நோக்கத்தோடு ஒரு விஷயத்தை அறிவித்தார். ஆனால் அவரே வியக்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட விஜய், ஃபெப்சி உண்ணாவிரத பந்தலில் இதுபற்றி விவரங்களை அப்டேட் செய்தார். இதுவரை விஜய் ரசிகர்கள் 30 ஆயிரம் தந்திகள் அனுப்பியிருக்கிறார்களாம் பிரதமருக்கு.

இன்னும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். இதற்கிடையில் ஈழத் தமிழர் நிவராண நிதியாக 12 லட்சத்தை கொடுத்த லாரன்ஸ், உங்களை வாழ வைத்த தமிழனுக்காக நீங்கள் இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்று விஜயிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். குடுமிப்பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சுப்பா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்