- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள் . முதன் முதலில் வருண அமைப்பை எதிர்த்து சமத் துவத் தொண்டு செய்த போராட்ட முன்னோடிகளில் புத்தர், மகாவீரர் ஆகியோர் சத்திரிய குல தத்துவ ஞானி களாவர். ஸ்மிருத காலத்து தரும சாஸ்திரங்களில் (அதா வது கி.மு. 500) சத்திரியர்கள் பாடம் கற்பிக்கலாம் என உள்ளது. அவர்களுடைய போதனைகள், அவற்றை பின்பற்றும் மக்கள் பிரிவை இந்து மதத்திற்கு மாறாக அறிவு மதமான பவுத்த மத மாக, மார்க்கமாக தோற்று வித்தனர். அந்த மதத்தில் மனிதர்களுக்குள் பேதம் காணப்படவில்லை எனலாம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் (கிட்டத்தட்ட 2040 வருடங்களுக்கு முன்) எந்த இடத்திலும் ஜாதி, கடவுள் குறிப்பிடப்பட வில்லை. பிறப்பைக் கூட தொழிலின் அடிப்படையில் என்பதில்கூட திருவள்ளு வருக்கு உடன்பாடில்லை என்பதற்கு சான்றாக, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை அதிகாரம் குறள் - 972). என்னும் குறள
கருத்துகள்