யுத்த நிறுத்தம் செய்ய இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் - கருணாநிதி அவசர வேண்டுகோள்


யுத்த நிறுத்தம் செய்ய இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் - கருணாநிதி அவசர வேண்டுகோள்



இலங்கையில் உடனடியாக யுத்தநிறுத்தத்தை அறிவிக்கும்படி இலங்கை அரசுக்கு இந்தியா வலியுறுத்தி உணர்த்தவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அவசர வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

இலங்கையில் போர்நிறுத்தம் என்பது இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என நான் குறிப்பிட்டிருந்தேன். விடுதலைப் புலிகளின் சார்பாக நடேசன், தாங்கள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று தற்பேது அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே "இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிட முடியும்" என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். "இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்" - என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது பிரதமர் மன்மோகன்சிங் 14. 10.2008 அன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்து, ‘இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சுகள் மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும்" - என்பதாகும்.

22.10.2008 அன்று நாடாளுமன்றத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வைத்த அறிக்கையிலும் "இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் அமைதிப் பேச்சுகள் மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்டதிட்டத்தின் படி தமிழ்ச்சமுதாயத்தை உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இருக்கவேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

இப்படியொரு பேச்சு நடைபெறவும், அரசியல் தீர்வு காணவும் இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கின்ற இலங்கை இராணுவம் - விடுதலைப் புலிகள் இரு சாராருமே இணக்கம் தெரிவித்து - போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதை வலியுறுத்தித்தான் ஒக்டோபர் 14ஆம் திகதி அன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்ாமானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நமது பிரதமரின் கருத்தும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளது.

இனி அந்தக் கருத்தைச் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பும் கடமையுமாகும். இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயற்படச் செய்வது அவசர,அவசியத் தேவையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை