மூக்கறுப்பு கல்வெட்டு மூக்கறுப்பு கல்வெட்டு பேளூர் திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! – சேலம் கல்வெட்டில் ஆதாரம் August 8, 2017 by புதிய அகராதி பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது. ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மண்பேசும் சரித்திரம் நிகழ்சியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோய...
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன். வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி: "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்த...
என் முதல் விமான பயணம் அரை டவுசர் போட்ட காலத்தில் வானத்தில் ஏரோப்பிளான் சத்தம் கேட்டால் அன்னாந்து கழுத்து வலிக்க வலிக்க விமானம் மறைவும் வரை பார்த்து கொண்டே இருப்பேன்.. என்றாவது ஒரு நாள் அதன் அருகே சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு அண்மையில் பயணம் செய்யும் வாய்பாகவே வசப்பட்டது...! என் தொழில் தொடர்பான நிறுவனம் 42 பேர் கொண்ட குழுவை சுற்றுலா அழைத்து சென்றார்கள் என்னைவிட என் பொண்ணுக்கும், பையனுக்கும்தான் ரொம்ப சந்தோசம்....! என் 10 வயது மகள் அப்பா நீங்கள் இந்த வயதில்.......!தான் பிளைட்டில் ஏறுகிறீர்கள் நான் 10வயதில பிளைட்டில் பறக்கப் போகிறேன் என நக்கல் அடித்தார்..ஒரு மாதம் முன்பிருந் தே இன்னும் 30 நாள்,29நாள்தான் இருக்கு என நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தனர்... டெல்லி,ஜெய்பூர் செல்வதாக திட்டம்.. சேலத்தில் இருந்து ஏ.சி.டீலக்ஸ் பஸ்ஸில் கிளம்பி அதிகாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சென்று இறங்கினோம். விமான நிலையத்தில் ஒரு காப்பி குடிக்கலாம் என நானும் என் பையனும் சென்றோம்...விலையை கேட்டவுடன் அடி வயிறு கலங்கி விட்ட்து......
கருத்துகள்