இடுகைகள்

பிரபாகரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி

படம்
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி 90 சிங்களச் சிப்பாய்கள் பலி ; காயமடைந்த 180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர் . 180 பேர் காயமடைந்தனர் . இதனால் ராணுவம் பின்வாங்கியது . இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர் . விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்த மாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது . இந்தத் தாக்குதலின்போது , விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும் நெருங்க முடியவில்லை . கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல் விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . 2 நேற்று முன்தினம் ...

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

படம்
ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசினார். அவரது உரை வருமாறு- மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய். புலியை காப்பாற்ற பாம்புகளும் , கழுதைகளும் தேவையில்லை. ஈவெரா இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார். புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கை தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர். பிரபாகரனின் பெயரை சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன். வீரமானவன். அவனது பெயரை உச்சரிக்க கூடாது என்றால் எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா. பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? ஒரு வீரனின் வீரன் என்று சொல்லக் கூடாதா? என்னை மிரட்டாதீர்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றி பேசினால் இறையாண்மை போய்விடும் என்கிறார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையான்மைக்கு எதிரானது இல்லையா? முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் இன்னும் பேசிக் கொண்டி...

விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர்

படம்
விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர், கிளி நொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக் குதலில் 200- க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது . விமானப்படையின் உதவியுடன் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவம் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறது . முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்துவிட்டோம் என்று கூறி னர் . ஆனால் இதுவரை அப்படி நடந்ததாகத் தெரியவில்லை . விடுதலைப்புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தி னரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன . 3 முனைகளில் ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது . கிளிநொச்சிக்கு வடக் கில் இருந்து ஒரு படையும் , தெற்கில் இருந்து ஒரு படையும் , மேற்கில் இருந்து மற் றொரு படையும் கிளிநொச் சியை நெருங்கி வ...

ரஜினியின் பேச்சு; முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க. உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா?

படம்
புலிகள் பற்றிய ரஜினியின் பேச்சு பிரபாகரன் பாராட்டு கிளிநொச்சியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங்கள் கொழும்பில் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது- முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க... உங்களால் அவங்களை ஜெயிக்க முடிந்ததா? என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம...

கிளிநொச்சியை, இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன் சூளுரை!

படம்
பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திரம் கிளிநொச்சியை , இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் : பிரபாகரன் சூளுரை ! கிளிநொச் சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் என்று , விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சூளூரை ஏற்றுள்ளார் . பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் அவர் கூறி இருக்கிறார் . இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தின ருக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது . நேற்று முன்தினம் முக்கிய கடற்படை தளமான பூநகரியை கைப் பற்றிய ராணுவம் , விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநக ராக விளங்கும் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது . இந்த நிலையில் , விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் . பி . க்கள் சேனாதிராஜா ஜெனந்த மூர்த்தி மற்றும் சந்திர நேரு ஆகியோர் வன்னிப் பகுதிக்குச் சென்று , தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந் தித்த...