ஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்
சென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார். அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-...