தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும்.
தமிழ் மீடியாவும் கூப்பாடும் தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக சுரண்டி, கலப்படம் செய்து அதன் பயனாக பெரும்பாலான தமிழர்கள் தங்கள் நிஜ அடையாளம் எது எனத் தெரியாத நிலைக்கு ஆக்கிய புண்ணியவான்களைத் தான் சாடுகிறது இத்தலைப்பு. முதலில் திரைப்படம். 'டேய்ய்ய் வாஆடா' எனக் கத்தும் நடிகர் யார்? எனக் கேட்டால் தமிழன் குழம்பி விடுவான். ஏனென்றால் எல்லாருமே அப்படித்தான் கத்துகிறார்கள். அது கதாநாயகனாகட்டும், நாயகியாகட்டும், மிக முக்கியமாக நகைச்சுவை நடிகர்கள் (!) என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களாகட்டும், இவர்களால் கத்தாமல் ஒரு காட்சியில் நடிக்க முடியாது. எந்த நகைச்சுவைக் காட்சியானாலும் அது கடைசியில் அடி உதையில் தான் போய் முடிய வேண்டும் என்பதை ஒவ்வொரு தமிழரும் எதிர்பார்க்கிறார். அது அவ்வாறு முடியாமல் போனால் அவர் படும் ஏமாற்றம் கொஞ்சநஞ்சமல்ல. நகைச்சுவை காட்சியில் அடி உதை இன்றியமையாதது என்பதைத் தமிழ் திரைப்பட உலகம் ஏனோ மிக ஆழமாக நம்புகிறது. அ...