இடுகைகள்

ஈழ செய்திதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. பா.நடேசன்

படம்
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது? சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். ...

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி

படம்
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி 90 சிங்களச் சிப்பாய்கள் பலி ; காயமடைந்த 180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர் . 180 பேர் காயமடைந்தனர் . இதனால் ராணுவம் பின்வாங்கியது . இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர் . விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்த மாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது . இந்தத் தாக்குதலின்போது , விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும் நெருங்க முடியவில்லை . கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல் விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . 2 நேற்று முன்தினம் ...

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

படம்
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு - இலங்கைப் போரில் கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு வரும் தமிழர் களின் பிரச்சினையில் உடனடி யாகத் தலையிட்டு , தமிழர்க ளுக்கு எதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்தவும் , அவர்கள் கவுரவமாக வாழ் வதை உறுதி செய்யும் வகையில் , அவர்களது துயர்களைக் களைய மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன் மோகன்சிங்கை நேற்று சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மனு ஒன்றை அளித்து வலியுறுத்தி னார்கள் . அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது : இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப் பட்டு வரும் கொடுமைகளுக்கு தீர் மானகரமானதும் , நிரந்தர மானதுமான அரசியல் தீர்வு காணப்படும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மனுவை பிரதமர் அவர்களிடம் சமர்ப் பிக்க தமிழ் நாட்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களா கிய நாங்...

சண்டை நீடித்தால் என்ன நடக்கும்?கிளிநொச்சி இன்று வீழ்கிறதா, நாளை வீழ்கிறதா என்பதல்ல கேள்வி

படம்
இரண்டே கி . மீ . தூரத்தில் உள்ள கிளிநொச்சி மிகவும் கடினமான பாதை ; உலக உருண்டையின் வேறு பக்கம் வழியாகச் சுற்றி வந்தால் சுலபமாகலாம் . சிறீலங்காவின் ராணுவம் இந்த ஆண்டின் இறுதி யில் அந்நகரத்தைப் பிடித்து விட்டாலும் கூட , யுத்தம் முடிவடையாது ; பாதி யுத்தம் கூட முடிந்ததாகக் கருதப்பட முடியாது . வெற்றி எனக் கூக்குரலிடு வது முட்டாள்தனமானது ; அரசுக்கும் போர்ப்படை யினர்க்கும் இது தெரியும் ! இருந்தாலும் ஏன் செய்கிறார்கள் ? ஒருவேளை , கர்வமாக இருக்கலாம் , அல்லது திசை திருப்புவதாக இருக்கலாம் , ஆனால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் . ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை ! லஞ்ச லாவண்யம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ! பொருளாதாரமோ சீரழிந்த நிலையில் ! அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் அளவு கடந்து ! அகில உலகிலும் நாட்டின் பெயர் நாறிக் கொண்டுள்ள நிலை ! இந்நிலையில் அந்த அரசாங்கம் வேறென்ன செய்ய முடியும் , வெற்றி என்று கூவுவதைத் தவிர ? வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிதைந்த சடலம் ராஜபக்சேவின் காலடியில் , புலிகள் சித...

இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது!

படம்
தமிழின உணர்வுக்குத் தளையா ? தமிழர்தம் தாயகத்தில் தமிழனை வெறும் சுவைஞனாக்கி சுரண்டியது தமிழ்த்திரை தமிழுணர்வு தவறியும் தலையெடுக்க விடாமல் தடுத்தனர் திரைத்துறைப் பார்ப்பனர் திரைப்படக் கவர்ச்சியால் தமிழனல் லாதார் தலைவனாக சித்தரிக்கப் பட்டார் திரைத்துறையே தமிழக அரசியலைத் தீர்மானம் செய்யும் வல்லமை பெற்றிருந்தது இனமொழி உணர்வின்றி இளையவர் கூட்டம் திரைப்படக் கவர்ச்சியால் வீணானது ! இனமொழி உணர்வுள்ள இயக்குநர் பாரதி அரசுசீமான் தமிழுணர்வால் தடமமைத்தார் ஆற்றுநீர்ச் சிக்கலில் அடவாடிசெய்யும் அண்டை மாநிலத்தைக் கண்டித்தார் வேற்று மொழியினர் விரவிய தமிழ்த்திரையில் தமிழின விடியலை முன்னெடுத்தார் ! ஈழ...

விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர்

படம்
விடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் உயிரிழந்தனர், கிளி நொச்சியைப் பிடிக்க முயலும் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக் குதலில் 200- க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது . விமானப்படையின் உதவியுடன் கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவம் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறது . முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்துவிட்டோம் என்று கூறி னர் . ஆனால் இதுவரை அப்படி நடந்ததாகத் தெரியவில்லை . விடுதலைப்புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தி னரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன . 3 முனைகளில் ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது . கிளிநொச்சிக்கு வடக் கில் இருந்து ஒரு படையும் , தெற்கில் இருந்து ஒரு படையும் , மேற்கில் இருந்து மற் றொரு படையும் கிளிநொச் சியை நெருங்கி வ...