மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!
பார்ப்பனர்கள் வகுத்த ஜாதி அடுக்குமுறையில் கடைகோடியில் இருப்பவர்கள் அருந்ததியர்கள் மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும் ! அண்ணா நூற்றாண்டிலே மகத்தான சாதனை தி . மு . க . மகுடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரக்கல் ! அருந்ததியர்களுக்கு கல்வி , வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அறிவித்த முதல்வர் கலைஞர் அவர்களின் சாதனை நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது , அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும் ! பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும் ! பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து ...