இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா. பாண்டியன் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக் கிறாரே?
சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிந்ததும் , செய்தியாளர்களிடம் தமிழக முதலமைச்சர் அளித்த பேட்டி கேள்வி : இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை ? கலைஞர் : கலந்து கொள்ளாத கட்சிகள் என்று கேட்டால் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , அ . தி . மு . க ., ம . தி . மு . க ., மற்றும் தே . மு . தி . க . ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை . கேள்வி : அவர்கள் கலந்து கொள்ளாதது பற்றி என்ன நினைக் கிறீர்கள் ? அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கருதுகிறீர் களா ? கலைஞர் : அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் . அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் . கேள்வி : ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யிருக்கிறார்களே ? கலைஞர் : அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க நான் விரும்ப வில்லை . கேள்வி : மத்திய அரசு எந்த மாதிரியான ...