இடுகைகள்

கார்த்திக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்! கார்த்திக்கும் படப்பிடிப்பும்.. தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது

படம்
கண்கெட்ட பின் கூலிங்கிளாஸ்! கார்த்திக்கும் படப்பிடிப்பும்... மறுபடியும் ஒரு அக்னி நட்சத்திரமாக ஜொலிப்பாரா கார்த்திக்? மணிரத்னம் இயக்கியவரும் ராவணன் படத்தில் நடித்து வருகிறாராம். நீண்ட காலம் கழித்து நடிக்க வந்திருக்கும் இவர், படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள். கார்த்திக் மட்டும் ஒழுக்கசீலராக இருந்திருந்தால், அவரது மார்க்கெட்டை யாராலும் அசைத்திருக்க முடியாது என்ற பரவலான பேச்சை இப்போதும் பல சினிமா கம்பெனிகளில் கேட்கலாம். தமிழ் சினிமா ரசிகர்களை தனது துறுதுறு நடிப்பால் கட்டி வைத்திருந்த கார்த்திக்கிடம், இல்லாத ஒரே விஷயம் பஞ்சுவாலிடி! காலை 9 மணிக்கு வரச்சொன்னால், மதியம் மூன்று மணிக்கு வந்து மேக்கப் ரூம் எங்கேயிருக்கு என்று கேட்பவர் அவர். 60 நாட்களில் முடிகிற படப்பிடிப்பு இவர் ஓருவராலேயே இரட்டிப்பு செலவை தந்ததால் பல தயாரிப்பாளர்களுக்கு நாக்கு வெளியே தள்ளியது. கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார் கார்த்திக். அரசியலுக்குள் காலடி வைத்த இவருக்கு அங்கேயும் இதே பிரச்சனை. ஏதோ பிரஸ்மீட்டை கேன்சல் செய்கிற மாதிரி பொதுக்கூட...

தகவல் தொழில்நுட்பப்பொறியாளர்கள் டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி நடிகர்கள், சூர்யா, கார்த்திக் பங்கேற்று கைகோத்து நின்றனர்

படம்
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரி சென்னை தகவல்தொழில்நுட்பப் பூங்கா பொறியாளர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிங்களப் போர்ப்படையினருக்கு பயிற்சி உள்பட எந்த உதவிகளையும் இந்திய அரசு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நேற்று சென்னையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் சென்னை டைடல் பார்க் அருகே மனிதச்சங்கிலி அணி வகுப்புப் போராட்டம் நடத்தினார்கள். நடிகர்கள், சூர்யா, கார்த்திக் ஆகியோர் இதில் பங்கேற்று தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களுடன் இணைந்து கைகோத்து நின்றனர். போரை நிறுத்து என்ற வாசகம் பொறித்த சட்டையை அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். இனப் படுகொலை நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்