பிள்ளையைக் கொடுப்பது கடவுள் செயல் என்றால், கள் ளத்தனமாகக் கூடி பிள்ளை களைப் பெறுகிறார்களே - அதற்கும் ஆண்டவன்தானே காரணம்?
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலையில் கூட அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அத னைப் பயன்படுத்திக் கொள் ளும் பாஜகட்சியின் போக்கைக் காங்கிரசுக் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ள . உலகமே இந்திய நாட்டின் பக்கம் கவலையுடன் இருக்கும் போது பாஜக மட்டும் அரசைக் குறைகூறி வருகிறது . மும்பைத் தாக்குதல் தொடர்பாக மோச மான விளம்பரங்களை டில்லி செய்தித்தாள்களில் வெளியிடும் பாஜகட்சியையும் அதன் குஜ ராத் முதல் அமைச்சரையும் வன்மையாகக் கண்டித்துள் ளனர் . கலவரம் நடந்த நேரத் தில் எந்த ஒரு மாநில அர சையோ , மய்ய அரசையோ காங்கிரசு குறை கூறியது கிடை யாது . ஆனால் பிரதமர் கனவில் மிதக்கும் அத்வானி இதனைச் செய்கிறார் என்று மய்ய அமைச்சர் கபில் சிபில் கூறி யுள்ளார் . அக்ஷார்தம் கோயிலில் 2002 இல் நடந்த குண்டு வெடிப் பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை இதுவரை அளிக் காத குஜராத் முதல் அமைச்சர் மோடி இப்போது ஒரு கோடி ரூபாய் உதவி என அறிவித்திருப் பது வேடிக்கைதான் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார் . ...