மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங் நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன். இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய ...