இடுகைகள்

விடுதலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை

பிற மாநிலங்களில் இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நீர் ரசாயனப் பொருள்களால் மாசுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீரில் ஃபுளோரைடு கூடுதலாக உள்ளது. இவை அரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன. பழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாக சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில முன்னாள் பா.ஜ.க. அரசு செலவு செய்யவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்யவில்லை. இந்திய எகிப்து நாடுகள் அய்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சி, வான்வெளியை அமைதிக்குப் பயன் படுத்துதல், வர்த்தகக் கூட்டுறவு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. ...

மாலேகான் குண்டுவெடிப்பு; சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டுள்ளனர்

குற்றவாளிகளுக்கு வக்காலத்தா? இந்துத்துவா பேசும் பாரதிய ஜனதா, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை நெறிதான் என்று பதவுரை - பொழிப்புரை செய்து கொண்டவர்களின் அந்தரங்கம் வன்முறைதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு இதனை பட்டாங்கமாக அறிவித்துவிட்டது. சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டுள்ளனர் என்கிற ஆதாரம் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே யிருக்கிறது. இப்பொழுது இன்னொரு கூடுதல் தகவல்: காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்காவுக்கும் மிகப்பெரிய அளவில் இதில் தொடர்பு உண்டு என்று ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச் சர்கள் முப்தி முகம்மது சையத் மற்றும் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் கூறியுள்ளனர். இந்த எஸ்.கே. சின்கா யார் என்றால், இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியாவார். இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மாலேகான் குண்டுவெடிப்ப...

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ராஜபக்சேவின் பேட்டி

படம்
இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சே டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியவை நயவஞ்சகமானவை என்பதில் அய்யமில்லை . விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் , அவர்களை அழிப்பதுதான் தங்களின் நோக்கம் என்றும் , மற்றபடி தமிழ் மக்களுக்கு எவ்விதத் தொல்லையும் இருக்காது என்கிற பாணியில் , கேட்பவர்களையெல்லாம் அடி முட்டாள்கள் என்கிற மமதையில் பேசியிருக்கிறார் . பொதுவாக , இலங்கை ஆட்சியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அது நம்பகத்தன்மை வாய்ந்தது அல்ல என்பது இதுவரை அவர்கள் நடந்து கொண்டு வந்திருக்கிற முரண்பாடான செயல்கள் மூலம் நாடு அறியும் . ராஜபக்சேயின் கருத்துகள் குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் (14.11.2008) ஆற்றிய உரையில் மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் . விடுதலைப்புலிகளோடு , அவர்களை அடக்க - அவர்களை செயல்படாமல் செய்ய என்ன முறைகள் வேண்டுமோ அந்த முறைகளை அவர் கையாளட்டும் , அத...