இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை
பிற மாநிலங்களில் இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நீர் ரசாயனப் பொருள்களால் மாசுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீரில் ஃபுளோரைடு கூடுதலாக உள்ளது. இவை அரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன. பழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாக சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில முன்னாள் பா.ஜ.க. அரசு செலவு செய்யவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்யவில்லை. இந்திய எகிப்து நாடுகள் அய்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சி, வான்வெளியை அமைதிக்குப் பயன் படுத்துதல், வர்த்தகக் கூட்டுறவு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. ...