"ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; ஒரு "டிவி'யும், ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது
சென்னை : " மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் , " ஸ்பெக்ட்ரம் ' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை ; ஒரு " டிவி ' யும் , ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது ' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார் . தொலைத்தொடர்புத் துறையில், உரிமம் வழங்குவதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி மற்றும் பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனரே? மத்திய அமைச்சர் ராஜா , சென்னையிலும் , டில்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து , இந்தப் பிரச்னை குறித்து விவரமாகவும் , விளக்கமாகவும் பல் வேறு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார் . அவரது விளக்கத் திற்கு பிறகும் வேண்டுமென்றே ஒரு பத்திரிகை , இதுகுறித்து தொடர்ந்து தவறான செய்திகளையே திருப்பி திருப் பிச் சொன்னால் , அது உண்மையாகி விடாதா என்ற எண்ணத்துடன் தங்களுக்கு தெரிந்த சிலரைப் பிடித்து , வெளியிடச் செய்து வருகிறது . தொலைத்தொடர்புத் துறையில் உரிமங்கள் மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டில் முதலில் வி...