இடுகைகள்

பா.ஜ.க லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் வரலாற்றுத் தவறுகள் ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!

ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு! காலங்கடந்தாலும் மிக முக்கியமான செயலில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் இறங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். ஆர்.எஸ்.எஸ். நாடு தழுவிய அளவில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. சரசுவதி சிசு மந்திர், பிரகாஷன், வித்யா பாரதி போன்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் வரலாறுகளை திரித்து, மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா வெறியைத் திணிக்கும் வகையிலும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்மீது வெறுப்பு நச்சு விதைகளை ஊன்றும் வகையிலும் பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாற்றுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன்சிங் ஆணை பிறப் பித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளில் ஏதோ இப்பொழுதுதான் இந்த வகையில்...