,கொடிய நோய்களால் பாதிக்கப்படுபவர் களிடம் சூனியம்தான் கார ணம் என்ற மூட நம்பிக்கை அதிகரித்துள்ளது
வழிகாட்டுகிறது அசாம் அரசு : சூனியம் மூடநம்பிக்கையை எதிர்த்து பள்ளியில் பாடம் : சூனியம் குறித்து மக்களிடம் உள்ள மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அது பற்றி தொடக்கப்பள்ளி பாடத்திட்டதில் பாடமாக சேர்க்க வேண்டும் என்ற தேசிய பெண்கள் கமிஷன் யோச னையை அசாம் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது . சூனியம் வைக்கும் பெண் கள் என்று சந்தேகிக்கப்படுப வர்களை பலர் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவங்கள் , வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே மாறிவிட்டது . அந்தளவுக்கு சூனியம் என்றாலே அந்த மக்களுக்கு பயம் . குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த மூட நம்பிக்கை அதிகம் உள்ளது . அசாம் மக்களிடமிருந்து இந்த மூட நம்பிக்கையை அகற்றும் வகையில் , தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் சூனி யம் பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும் என்று தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத் தியது . தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர் நீவா கொன்வார் கூறுகையில் , தொற்று நோய் போல் சூனியம் பற்றிய மூட நம்பிக்கையும் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது . இத...