இடுகைகள்

போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

படம்
இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார் . அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார் . வழக்கம் போல அதிமுக , மதிமுக , தேமுதிக ஆகிய கட்சிகள் இக்குழுவில் இடம் பெறவில்லை . இதையடுத்து முதல்வர் கருணாநிதி , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் . அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார் . பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே , புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப . சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர் . போர் நிறுத்தமே முக்கியம்-கருணாநிதி: முன்னதாக டெல்லி வந்த கருணாநிதி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : கேள்வி : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் வைக்கப்படப் போகும் முக்கியமான கோரிக்கை எது ? கருணாநிதி : முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான் . கேள்வி : கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே வைத்து...