இடுகைகள்

மும்பை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜமாத் உத் தாவா;தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை

படம்
தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது, அதன் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் எல்லாம் உதவாது. அந்த அமைப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வேலைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது. டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஜான் நெக்ரோபாண்டேவிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசுடனும் பிரணாப் தொலைபேசியில் பேசினார். அமெரிக்காவிடம் பிரணாப் விளக்கம்: அவர்களிடம், லஷ்கர் ஏ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பதாலோ, அதன் சில அலுவலங்களுக்கு சீல் வைப்பதாலோ மட்டும் நிலைமை மாறிவிடாது, அவர்கள் தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை என்பதை முகர்ஜி சுட்டிக் காட்டினார் . தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் நெக்ரோபாண்டே சந்தித்துப் பேசினார். ஜெர்மன் அமைச்சர் வருகை: இதற்கிடையே ஜெர்மன் உள்துறை அமைச்சர்...

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்

படம்
மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக் கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல் மைக்கல் முல்லன் கூறியுள்ளார் . பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம் . கே . நாராயணனிடம் முல்லன் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன . பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி , ராணுவத் தளபதி , ஐஎஸ்ஐ தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது . அப்போது மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர் கூறினர் . ஆனால் , அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களை முல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஏ தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ , ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர் . இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி , ...

கஸர், லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன். மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்; தாவூத் இப்ராகிமே காரணம்!

படம்
கஸர் , பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன் . மும்பை போலீஸாரும் , ஐபி அதிகாரிகளும் இவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை கஸர் தெரிவித்துள்ளான் . மேலும் தனது செயல் முற்றிலும் சரியானதே , இதில் வருத்தப்பட எதுவும் இல்லை என்றும் அவன் கூறியுள்ளான் . தாவூத் இப்ராகிமே காரணம்! பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் தாதா தாவூத் இப்ராகிம்தான் இந்த பயங்கர தாக்குதலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து , அரங்கேற்றியது என்பதை கஸர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் . மும்பை , கொலாபா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும் , தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியுமான ஒரு நபர்தான் , தாக்குதலுக்குத் தேவையான அனைத்து வகை ஆயுதங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது . கஸர் , லஷ்கர் இ தொப்யா அமைப்பைச் சேர்ந்தவன் . மும்பை போலீஸாரிடம் கஸர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் ... 12 பேர் கும்பல் மொத்தம் 12 பேர் கராச்சியிலிருந்து படகுகள் மூலம் சசூல் துறைமுகப் பகுதிக்கு வந்தோம் . அங்கிர...

உளவு முன்னெச்சரிக்கை வராதது ஏன்?மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

படம்
2001 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரண்டாவது பெரிய பயங்கரவாதத் தாக்குதல் மும்பையில் நடந்துள்ளது. இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை நகரம் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம், தாஜ், டிரைடண்ட் நட்சத்திர விடுதிகள், நாரிமேன் மாளிகை, வில்லே பார்லே, மெட்ரோ திரையரங்கு ஆகியன உட்பட 9 இடங்களை குறிவைத்து நேற்று இரவு புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,187க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நிய நாட்டு முக்கிய நபர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரை பயங்கரவாதிகள் பிணையமாக பிடித்துவிட்ட நிலையில், அவர்களை மீட்க விடுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்திய மும்பை காவல் துறை அதிகாரி கார்க்கரே உட்பட 3 அதிகாரிகளும், 11 காவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மற்ற இடங்களில் நடந்த மோதல்களில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கார் உள்ளிட்ட அதிகாரிகளும், மேலும் பல காவலர்களும் உயிரிழந்துள்ளனர். பய...