இடுகைகள்

இட ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன

படம்
1993 தேர்தலில் ஜனதா தளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது . தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது . பொறுக் குமா பார்ப்பனர்களுக்கு ? தினமணி , இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொண்டன . துரதிர்ஷ்ட வசமாக ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை . தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல் படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப் படுத்தும் என்று எழுதியது தினமணி . பிற்படுத்தப்பட்ட மக்களும் , தாழ்த்தப்பட்ட மக்களும் பெரும் பாலான மக்கள்தானே . இந்த நிலையில் , தனியார்த் துறை களில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும் ? வி . பி . சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக் காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல் , தனி யார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு...