கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்
கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும் பிறந்த நாளில் யாம் பெற்ற பேறு - இன்பம் இதுவே! தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு: எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். அய்யாவிடம் கற்ற பாடம் அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேய...