இடுகைகள்

தமிழ் தமிழ் நியூஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும்

படம்
கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகள் அகன்றது என்ற சேதி நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் பயன் தருவதாகும் பிறந்த நாளில் யாம் பெற்ற பேறு - இன்பம் இதுவே! தமிழர் தலைவர் விடுத்துள்ள பிறந்த நாள் சேதி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தம் பிறந்த நாள் செய்தியாக அளித்துள்ள அறிக்கை வருமாறு: எனக்கு இன்று 76-வது பிறந்த நாள். வயது ஏறுவது இயற்கை; வாழ்க்கையை லட்சிய நோக்கோடு வாழ்வதுதான் முக்கியம். தனக்கு மட்டுமே வாழ்க்கை என்றெண்ணாது சமுதாயத்திற்காக அதன் முன்னேற்றத்திற்கும் உழைப்பதே உயர் தனிக்குறிக்கோள் என்று கருதி வாழ்வதே பயனுறு வாழ்வு என்பதை நம் அறிவுக்கு தந்தை பெரியார் போதித்ததோடு, சாதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். அய்யாவிடம் கற்ற பாடம் அவர்தம் தொண்டர்களுக்குத் தொண்டனான தோழனான எனது வாழ்க்கையும் அவர்கள் விட்ட பணி தொடருவதே குறிக்கோள் என்ற அடிப்படையிலேய...

பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள்.

படம்
ப சுபதி நடிப்பில் உருவாகிவரும் வெடிகுண்டு முருகேசன் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய மூர்த்தி இயக்கிவரும் இந்தப் படம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டாலும் குசேலன் போன்ற படங்களில் பசுபதி பிஸியாக இருந்ததால் தாமதாமானது. இப்போது வேகமாக வளர்ந்து படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளும் நிறைவடைந்துவிட்டன. அண்ணாமலை பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக ஜோதிர்மயி அவருக்கு ஜோடியா நடித்துள்ளார். பசுபதிக்கு இணையான வேடத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். திருடனான பசுபதிக்கும் போலீஸாக வரும் ஜோதிர்மயிக்கும் இடையில் ஏற்படும் மொதலும் நட்பும்தான் படத்தின் கதை. பசுபதி, வடிவேலு கூட்டணியில் உருவாகியிருக்கும் காட்சிகள் தியேடரை அதிரவைக்கும் என்கிறார்கள். படத்துக்கு தினா இசைமைத்துள்ளார். படம் டிசம்பரில் வருமா அல்லது பொங்கலுக்குத் தள்ளிப்பொகுமா என்பது விரைவில் தெரியவரும

1981-இலே 97,000-த்திற்கும் மேற்பட்ட நூல்கள் எப்படி எரிக்கப்பட்டுச் சாம்பல் மேடாயின?

படம்
சென்னை பெரியார் திடலில் 08-11-2008 அன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை என்ற அமைப்பு துவங்கப்பட்டது. அதில் சிங்கள இன வெறியார்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிய ஆவணப்படம் திரையிடல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த தமிழின உணர்வாளர்களுக்கு எரிகிற தீயில் (உணர்வுகளில்) எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. நிகிரியின் தயாரிப்பில் சோமீதரன் என்கிற ஈழத்தமிழர் இதை இயக்கியிருந்தார். தமிழர் தலைவர் தலைமையுறையாற்றும்போது இன்றைய இளைஞர்கள் எங்கோ திசை தடுமாறிச் சென்று கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புக்குரிய குறும்படத்தை வெளிக்கொணர்ந்த இயக்குநர் சோமீரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சோமீதரன் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவரை வரலாற்று இயக்குநர் என்றே அழைக்கலாம் என்றார். அதுமட்டுமா, சமுதாயத்திலே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை தொடங்கப்பட்டு இயக்க வரலாற்றிலே இன்றைக்கு திராவிடர் கழகம் ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது. இன்றைக்கு இயக்க வரலாற்றிலே ஒரு முக...

மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

படம்
வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங் நான் என்னுடைய நன்றியை வெளிப் படையாக நண்பர் வீரமணி அவர் களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக் குக் கொண்டு வந் தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெ ழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன். இரண்டு நாட்களாக நான் தமிழகத் திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையு டனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண் கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரிய தலைவர் தந்தை பெரி யார்தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும் பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய ...

பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா?

அறிக்கை எதற்காக? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரினை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை மேலும் வலியுறுத்த, தமிழக அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழு முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 4 அன்று டில்லி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் - தமது குடும்பச் சொத்தைக் காப்பாற்றவும், அமைச்சர் இராசாவைக் காப்பாற்றவும் அரசு செலவில் கருணாநிதி டில்லி செல்கிறார் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே! அவர் சொல் வது உண்மையானது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும், அப்படி ஒரு இரகசியம் பேச அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டா போவார்கள்? பிரதமரிடம் இரகசியமாக பேசவேண்டுமென்றால், ஒரு முதலமைச்சருக்கு வேறு வசதிகளே கிடையாதா? தன்மீதுள்ள வழக்குகளை விலக்கிக் கொள்ள பிரதமர் வாஜ்பேயிடம் வைத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளாததால்தான் மத்தியில் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவினை ஜெயலலிதா விலக்கிக் கொண்டாரே - அந்த முறையில், அந்தச் சுபாவத்தில்தான் இப்படி ஒரு அறிக்கையா

ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்திவரும் ஜெயலலிதா - பார்வையில் பெரும் ஊழலா? எந்த முறைகேடும் இல்லை: ஜெயலலிதாவுக்கு ஆ.இராசா பதில்

படம்
"அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த முறை கேடும் நடைபெறவில்லை. ஊழல் மலிந்த அரசியல் வாழ்வு நடத்தி வரும் ஜெயலலிதாவிற்கு எல்லாமே ராட்சத ஊழ லாகத்தான் தெரியும்" என்று மய்யத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் - ஆங்கிலம் தன் வாய்க்கு மட் டுமே வசப்படும் என்று கருதிக் கொண்டிருப்பவர். டான்சி நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கியதில் தன் மனசாட்சிப்படி கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத் தப்பட்டவர். இன்றும் நீதிமன் றத்தில் வழக்குகளை இழுத் தடித்துக் கொண்டு மக்கள் பணத்தில் ஊதாரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் - அலை வரிசை குறித்த அறிக்கை விவரமற்ற வேடிக்கையான பேத்தலாக இருப்பதில் ஆச்சரி யமில்லை என்றாலும், அவ ருக்கு சுருக்கமான பதில் தரு ...

ஒரு காலகட்டத்தில் ராஜீவ் காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே? புலவர் புலமைப்பித்தன்,

படம்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். எதிர்த்ததால் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் மிரட்டப்பட்டார் என்று அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழகத்திலிருந்து வெளியாகும் "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் இடம்பெற்றுள்ளதாவது: "புலிகள் நடமாட்டம்" தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், "ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்" என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். "அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாயமல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல" என்கிறீர்களே. எப்படி? "மக்கள் திலகம் ...

ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் கனிமொழி எம்.பி வெளியிட

படம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒப்புதலோடு எழுதியவர் டாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த். தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆங்கில புத்தகத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா இம்மாதம் 30 ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைப்பு- ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியின் வெற்றிகள் குறித்தும், அது எவ்வாறு ரஜினியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் கட்டுரையாகவே எழுதியிருக்கிறாராம் காயத்திரி ஸ்ரீகாந்த். ரஜினி என்ற மந்திரச் சொல்லுக்கு இருக்கிற ஈர்ப்பு விசை குறித்தும் தமிழ் பதிப்பில் சுவையாக அலசியிருக்கிறாராம் நூலாசிரியர். கனிமொழி எம்.பி வெளியிட, முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் தொழில் அதிபர ் மீனா ரெட்டி. ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்

சண்டை நீடித்தால் என்ன நடக்கும்?கிளிநொச்சி இன்று வீழ்கிறதா, நாளை வீழ்கிறதா என்பதல்ல கேள்வி

படம்
இரண்டே கி . மீ . தூரத்தில் உள்ள கிளிநொச்சி மிகவும் கடினமான பாதை ; உலக உருண்டையின் வேறு பக்கம் வழியாகச் சுற்றி வந்தால் சுலபமாகலாம் . சிறீலங்காவின் ராணுவம் இந்த ஆண்டின் இறுதி யில் அந்நகரத்தைப் பிடித்து விட்டாலும் கூட , யுத்தம் முடிவடையாது ; பாதி யுத்தம் கூட முடிந்ததாகக் கருதப்பட முடியாது . வெற்றி எனக் கூக்குரலிடு வது முட்டாள்தனமானது ; அரசுக்கும் போர்ப்படை யினர்க்கும் இது தெரியும் ! இருந்தாலும் ஏன் செய்கிறார்கள் ? ஒருவேளை , கர்வமாக இருக்கலாம் , அல்லது திசை திருப்புவதாக இருக்கலாம் , ஆனால் இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் . ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை ! லஞ்ச லாவண்யம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ! பொருளாதாரமோ சீரழிந்த நிலையில் ! அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகம் அளவு கடந்து ! அகில உலகிலும் நாட்டின் பெயர் நாறிக் கொண்டுள்ள நிலை ! இந்நிலையில் அந்த அரசாங்கம் வேறென்ன செய்ய முடியும் , வெற்றி என்று கூவுவதைத் தவிர ? வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிதைந்த சடலம் ராஜபக்சேவின் காலடியில் , புலிகள் சித...

காந்தியடிகள்;பத்திரிகையா ளர் ஒருவர், இந்தியாவின் வைஸ்ராயாக ஒரே ஒரு நாள் மட்டும் உங்களை நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

படம்
சிம்லாவில் வைஸ்ராய் தங்கியிருந்த நேரத்தில் காந்தி யடிகளைச் சந்திக்க அழைப்பு வந்தது . காந்தியடிகள் வைஸ் ராய் மாளிகைக்கு வெளியே காந்திருந்தபோது , மாளிகை அருகே இருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மனிதக் கழிவு களைச் சுமந்து செல்லும் அலங் கோல நிலையில் இருந்த காட் சியைப் பார்த்த காந்தியடி களின் கண்கள் குளமாயின . அந்த நேரத்தில் , பத்திரிகையா ளர் ஒருவர் , இந்தியாவின் வைஸ்ராயாக ஒரே ஒரு நாள் மட்டும் உங்களை நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? என்று கேட்டார் . அதோ , என் துப்புரவுத் தொழிலாளத் தோழர்கள் செய்கின்றார்களே அந்தப் பணியைத்தான் நான் செய் வேன் என்று காந்தியடிகள் கூறினார் . இரண்டாவது நாளும் வைஸ்ராயாக நீங்கள் நீடிக் கப்பட்டால் . . . என்று கேட்ட போது , மீண்டும் அதே துப்புர வுப் பணியைத்தான் செய் வேன் என்று உறுதிபடக் கூறி னார் . மனிதக் கழிவுகளை மனிதர் சுமக்கின்ற கொடுமையைக் கண்டு , மனம் வெந்து நொந்து குமுறிய மகாத்மாவின் மன நிலையைப் போலவே , அடக் கப்ப...

.வீரப்பன் மனைவி கைது

NkR]d LPjRp ÅWlTu Uû]® ØjÕXhѪûV LoSôPL úTôÄNôo úStß Ss°WÜ §¼ùW] ûLÕ ùNnÕ UôúRvYWu UûXdÏ AûZjÕf ùNpXlThPRôL á\lTÓ¡\Õ. ØjÕùXhѪÙPu ÅWlT²u áhPô°Ls CWiÓm úTÚm ûLÕ ùNnVlThÓs[]o. CkR ûLÕ Tt± Esðo LôYp ¨ûXVj§p LoSôPL úTôÄNôo GkR ®R RLYûXÙm ùR¬®dL®pûX Guß á\lTÓ¡\Õ. Cuß AYoLû[ ûUão ¿§Uu\j§p B_oTÓjR CÚlTRôLÜm Ae¡ÚkÕ YÚm RLYpLs ùR¬®d¡u\]. ÅWlTu C\kÕ 4 BiÓLs L¯jÕ §¼ùW] CkR ûLÕ SPY¥dûL úUtùLôs[lThÓs[Rôp AlTϧ«p TWTWl× HtThÓs[Õ.

இலங்கை அகதிகளையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டுவதாக தா. பாண்டியன் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக் கிறாரே?

படம்
சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிந்ததும் , செய்தியாளர்களிடம் தமிழக முதலமைச்சர் அளித்த பேட்டி கேள்வி : இன்றைய கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை ? கலைஞர் : கலந்து கொள்ளாத கட்சிகள் என்று கேட்டால் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , அ . தி . மு . க ., ம . தி . மு . க ., மற்றும் தே . மு . தி . க . ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை . கேள்வி : அவர்கள் கலந்து கொள்ளாதது பற்றி என்ன நினைக் கிறீர்கள் ? அவர்களுக்கு அக்கறை இல்லை என்று கருதுகிறீர் களா ? கலைஞர் : அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் . அவர்கள் வராதது பற்றி உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் . கேள்வி : ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி யிருக்கிறார்களே ? கலைஞர் : அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க நான் விரும்ப வில்லை . கேள்வி : மத்திய அரசு எந்த மாதிரியான ...

"ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; ஒரு "டிவி'யும், ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது

படம்
சென்னை : " மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் , " ஸ்பெக்ட்ரம் ' ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை ; ஒரு " டிவி ' யும் , ஒரு பத்திரிகையும் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகிறது ' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார் . தொலைத்தொடர்புத் துறையில், உரிமம் வழங்குவதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி மற்றும் பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனரே? மத்திய அமைச்சர் ராஜா , சென்னையிலும் , டில்லியிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து , இந்தப் பிரச்னை குறித்து விவரமாகவும் , விளக்கமாகவும் பல் வேறு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார் . அவரது விளக்கத் திற்கு பிறகும் வேண்டுமென்றே ஒரு பத்திரிகை , இதுகுறித்து தொடர்ந்து தவறான செய்திகளையே திருப்பி திருப் பிச் சொன்னால் , அது உண்மையாகி விடாதா என்ற எண்ணத்துடன் தங்களுக்கு தெரிந்த சிலரைப் பிடித்து , வெளியிடச் செய்து வருகிறது . தொலைத்தொடர்புத் துறையில் உரிமங்கள் மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டில் முதலில் வி...

என்னை சாதனையாளர் என்று குறிப்பிடு வதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் -கலைஞர்

படம்
எனது உச்சக்கட்ட சாதனை: மனிதனாகவே வாழ முடியாத அநீதிக்குத் தள்ளப்பட்ட அருந்ததியர்க்கு அளிக்கும் இட ஒதுக்கீடே! முதல்வர் கலைஞர் பெருமிதம் - சென்னை சாந்தோம் கலைவிழா மன்றம் சார்பில் 2008 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று மாலை சாந்தோமில் நடைபெற்றது. இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்ற முதல்வர் கலைஞர் தனது ஏற்புரையில், என்னுடைய சாதனை கள் ஒன்று, இரண்டு . . . என்று வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய உணர்விற்கு ஏற்ப, தமிழர்கள் உண்மை யிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது எந்தச் சாதனை என்றால் அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகிவிட்டது என்ற அந்தச் செய்திதான் நான் முதன் மையாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், மனிதனாகவே வாழ முடியாத நிலையில் உள்ள அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் சாதனை முற்றுப் பெறவிருக்கிறது என்று குறிப்பிட்ட...