மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!
மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம் ! வெறுக்கத்தகுந்தது ; வன்மையான கண்டனத்திற்குரியது . பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில் ; பல முக்கிய காவல் துறையினர் , அதிகாரிகள் சாவு ! 100 பேருக்குமேல் உயிரிழப்பு ; 200 பேர் படுகாயம் ! மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் , ஓட்டலில் தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர் . இராணுவம் உடனே நுழைந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் ; விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது ! கண்டிக்கப்பட வேண்டிய செயல் ! முதலாவதாக செய்யவேண்டியது இன்று அதிகாலை 3 மணியளவில் , தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை ; காரணம் , நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை ! மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா ? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநில காவல்துறை - குறிப்ப...