நான் ரசித்த கவிதைகள்.


நான் ரசித்த கவிதைகள்.

1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
தீக்குச்சி
4.அம்மண சிறுவன் கீழே,
வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி.
5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்
நிலவை அசைத்தான் குளத்தில்.

இது எப்படி இருக்கு?

இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது ,
இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஒழுங்கான கலரிலும்... சின்ன பாண்டிலும் எழுதுங்கள். கண்கள் எரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை