அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக


அய்ந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரசு வெற்றி
ராஜஸ்தானைக் கோட்டைவிட்டது பாஜக

மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் மட்டுமே பாஜக ஆட்சி
இடதுசாரிக் கட்சிகளின் முயற்சிக்கு மூக்கறுப்பு

டில்லி, ராஜஸ்தான், மிசோராம், சட்டிஸ்கர், மத்தியப்பிரதேசம்ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்துஇன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் டில்லி, ராஜஸ்தான், மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களில்காங்கிரசுக் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற்று ஆட்சியில்இருந்த பாஜகட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. சட்டீஸ்கர்மாநிலத்தில் காங்கிரசும் பாஜகட்சியும் சமபலத்தில் இடங்களைப் பெற்றுள்ளன. இந்த மாநிலத்தில் பாஜகட்சி தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நிலை யில்மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகமே! மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டுமேமதவெறிக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் வருமாறு:

டில்லி: மொத்த இடங்கள் 69
காங்கிரசு 39
பா... 23
பகுஜன் சமாஜ் கட்சி 04
பிற கட்சிகள் 03

ராஜஸ்தான்: மொத்த இடங்கள் 200
காங்கிரசு 96
பா... 77
பகுஜன் சமாஜ் கட்சி 06
பிற கட்சிகள் 21

மிசோராம்: மொத்த இடங்கள் 40
காங்கிரசு 21
பா... 00
மணிப்பூர் தேசியக் கட்சி 05

சட்டீஸ்கர்: மொத்த இடங்கள் 90
காங்கிரசு 37
பா... 47
பகுஜன் சமாஜ் கட்சி 03
பிற கட்சிகள் 03

மத்தியப் பிரதேசம்: மொத்த இடங்கள் 230
காங்கிரசு 71
பா... 128
பகுஜன் சமாஜ் கட்சி 12
பிற கட்சிகள் 18

இது சிறு பொதுத் தேர்தல் என்று வருணிக்கத்தக்க தேர்த லாகக் கருதப்பட்டதேர்தலாகும். மும்பையில் தாக்குதல் நடை பெற்றபின் மாநிலத் தேர்தல்கள்நான்கு மாநிலங்களில் நடை பெற்றது. இதைவைத்து பா..கட்சி தன் வழக்கமானமதவெறி பிரச்சாரத்தைச் செய்தது. ஆனாலும் மதச்சார்பின்மையும் சமூக நீதியும்வெற்றி பெற்றுள்ளன என்பதோடு காங்கிரசை வீழ்த்திட இடதுசாரிக் கட்சிகளின்முயற்சியும் தோற்றுப் போயுள்ளது குறிப்பிடத்தக்கன.

அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுக்குப் பின் எல்லோரும் பாஜகட்சியின் பக்கம்வருவார்கள் என்று கனவு கண்ட பாஜகட் சிக்கு இறுதி அடியாக முடிவுகள்அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

மூன்றாவது அணி என்கிற மனக் கோட்டையைக் கட்டலாம் என்று விசித்திரக்கூட்டணியைத் தமிழகத்தில் அமைத்துள்ள வர்களும் பகல் கனவு கலைந்துபோயுள்ளனர் என்றே கூறலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை