மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் ;பாகிஸ்தான்


மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் எனபாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக்கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள்நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்கமுப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல்மைக்கல் முல்லன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும்பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனிடம் முல்லன் இந்தத்தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி, ராணுவத் தளபதி, ஐஎஸ்ஐ தலைவர்உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போதுமும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர்கூறினர்.

ஆனால், அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களைமுல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள்அனைவரும் லஷ்கர் தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ, ஐஎஸ்ஐஅதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர்.



இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி, நாராயணனிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படை தடுக்கவில்லை-கஸாவ்:

இதற்கிடையே போலீசாரிடம் சிக்கிய அஜ்மல் அமீர் கஸாவிடமிருந்து மேலும்ஒரு விவரமும் கிடைத்துள்ளது. அவன் அளித்த வாக்குமூலத்தில்,

நாங்கள் 10 பேரும் முமபையில் தாக்குதல் நடத்த கராச்சியிலிருந்து அல்ஹூசைனி என்ற கப்பலில் கடந்த 20ம் தேதி புறப்பட்டோம். இந்தக் கப்பலைபாகிஸ்தான் கடற்படை எந்த இடத்திலும் நிறுத்தவில்லை. நீண்ட பயணத்துக்குப்பின் இந்தியக் கடல் பகுதி வந்தவிட்டதாகக் கூறி எங்களை அதிலிருந்து குபேர்படகுக்கு மாற்றினர் என்று கூறியுள்ளான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை