ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

தீவிரவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை கொடியசைத்து துவங்கி வைக்க Srikanth - Trishaசம்மதித்திருந்தார் த்ரிஷா. சென்னையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து அவர் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம்.

தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பாங்காக் போயிருந்தார் த்ரிஷா. இவருக்கு ஜோடி நாகார்ஜுன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திற்கு வந்து பார்த்தால், பெரிய திண்டுக்கல் பூட்டு தொங்கியதாம்! அச்சச்சோ என்று பதறியவரிடம், அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் விபரத்தை கூறினார்களாம். பாங்காக் நாட்டில் அரசியல் குழப்பம். அந்நாட்டு தலைமையை எதிர்த்து விமான நிலையத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்ட, திறந்திருந்தால்தானே மிரட்டுவார்கள் என்று முடிவு செய்த போலீஸ், விமான நிலையத்தையே மூடிவிட்டது.

அடித்து பிடித்துக் கொண்டு புக்கட் தீவுக்கு வந்து சேர்ந்த த்ரிஷா, அங்கிருந்து கோலாலம்பூரில் ஃபிளைட் பிடித்து சென்னையில் இறங்கினாராம். இப்படியெல்லாம் ஓடோடி வந்த த்ரிஷா, கொடியை தூக்கி கோஷம் போட்டபோது, அதில் நிஜமான அக்கறை தெரிந்தது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்