"எய்ட்ஸ்' நோயால் 1981ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு "எய்ட்ஸ்' என்றவார்த்தையே இல்லை. இன்று இந்த உலகத்தில் எந்தபகுதியிலும் இந்த வார்த்தையை தெரியாதவர் அரிது. "எய்ட்ஸ்' நோயால் 1981ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேர்மரணமடைந்துள்ளனர். இதில் ஆப்ரிக்காவில் மட்டும் 75 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது 3 கோடியே 30 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி., தொற்றுள்ளது.
எய்ட்ஸை குணமாக்கும் மருந்து இல்லை. எனவேதான்வருமுன் காப்போம்' எனும் பழைய பழமொழிதான் இந்நோய் தடுப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வரும்முன் தடுத்துவிடுவது முற்றிலும் சாத்தியமில்லை. ஊசி மூலமாகவோ ரத்தப்பரிமாற்றம் வழியாகவோ இந்த வைரஸ்பரவும். என்றாலும் இதற்கு சிறிய அளவிலான வாய்ப்புதான் உள்ளது.
"
எச்.ஐ.வி., தொற்றுக்குள்ளானவரிடம் பாலுறவு கொள்வதன் வாயிலாகத்தான் இந்நோய் அதிகமாக பரவுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று - பாலுறவை தவிர்த்துவிடுதல். மற்றொன்றுபாதுகாப்பான உறவு. இருவரில் ஒருவருக்கு எச்.ஐ.வி., தொற்றியிருக்கும் பட்சத்தில் திருமணத்துக்குப் பின்மற்றொரு தம்பதிக்கு எச்.ஐ.வி., தொற்றும் வாய்ப்புள்ளது. லட்கணக்கான பெண்கள் தங்கள் கணவன் வழியாகஎச்.ஐ.வி., தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
கருத்துகள்