வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன்.
யார் யாரோ ஒட்ட பார்த்தார்கள். ஆனாலும், திசைகள் போலவே திருப்பிக் கொண்டு நிற்கிறார்கள் வைரமுத்துவும், இளையராஜாவும். இது வாரிசுகளின் காலம். அப்பாவின் கோபமும், பிடிவாதமும் பிள்ளைகளை என்ன செய்யும்? “இதுவரைக்கும் யாருமே ட்ரை பண்ணலே, வேணும்னா யாராவது டைரக்டர்கள் முயற்சிக்கட்டும். வைரமுத்துவின் பாடல்களுக்கு இசையமைக்க தயார்” என்று கூறியிருக்கிறார் யுவன். இந்த நல்ல காரியத்தை எந்த புண்ணியவான் ஆரம்பித்து வைக்கப் போகிறாரோ? அதிருக்கட்டும்... ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து விலகிக் கொண்ட யுவனிடம், அப்படத்திற்காக போட்டுக் கொடுத்த இரண்டு பாடல்களையும் திருப்பி கொடுத்துவிட்டாராம் செல்வராகவன்.
ட்யூனை பயன்படுத்தாமல் விட்டதோடு, பாடல் வரிகளையும், ட்யூனையும் நா.முத்துக்குமாருக்கும், யுவனுக்கும் தபால் மூலம் திருப்பி அனுப்பிவிட்டாராம். மாறாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்திருக்கிறார்.
முதல் படத்திலிருந்து நேற்றுவரை இளம் கவிஞர்களிடம் மட்டுமே பாடல் வாங்கி பழகிய செல்வா, முதன் முதலாக ஐம்பதை தொட்டவரிடம் பாடல் வாங்குவது ஆச்சர்யம்தான். வயசு போனால் என்ன? வரிகள் இளமையாக இருக்கிறதே என்று நினைத்திருப்பார் போல!
கருத்துகள்