கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் ஆவேசப் பதிலடி
90 சிங்களச் சிப்பாய்கள் பலி; காயமடைந்த
180 பேருடன் இலங்கை ராணுவம் பின்வாங்கியது
பொன்சேகா ஒப்புதல் வாக்குமூலம்
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் நடத்திய பதில் தாக்குதலில் சிங்களச்சிப்பாய்கள் 90 பேர் கொல்லப்பட்டனர். 180 பேர் காயமடைந்தனர். இதனால்ராணுவம் பின்வாங்கியது. இலங்கை ராணுவத்திடமிருந்து ஏராளமானஆயுதங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற கடந்தமாதமாக சிங்கள ராணுவம் தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தத்தாக்குதலின்போது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிலஇடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றினாலும் கிளிநொச்சியை இன்னும்நெருங்க முடியவில்லை. கிளிநொச்சிக்குள் ராணுவத்தை நுழைய விடாமல்விடுதலைப்புலிகள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 2
நேற்று முன்தினம் கிளிநொச்சி அருகேயுள்ள ஒலுமடு, முல்லைத் தீவு, ஓட்டுப்புலம், புத்துமுறிப்பு அறிவியல் நகர் ஆகிய இடங்களில் சிங்களராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை உச்சக்கட்டத்தைஎட்டியது. கிளிநொச்சியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளபகுதிகளில் இந்தச் சண்டை நடந்தது.
ராணுவத்தினர்
90 பேர் சாவு!
இருதரப்பினருக்கும் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச்சண்டையில் விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவம் மீது ஆவேச பதில்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் சிங்களப் படையினருக்கு பலத்த சேதம்ஏற்பட்டது.
முதலில் பின்வாங்குவதுபோல் போக்கு காட்டிய விடுதலைப்புலிகள் பின்னர்தாங்கள் பாதுகாப்பு அரண் அமைத்திருந்த பகுதிகளில் இருந்து சிங்களச்சிப்பாய்கள் மீது பயங்கரத் தாக்குதலை தொடுத்தனர். இதனால் முன்னேறிச்சென்ற ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலில்சிக்கிக்கொண்டார்கள்.
இந்தத் தாக்குதலில் 60 சிங்களச் சிப்பாய்கள் பலியானார்கள். சிப்பாய்களின்பலரது உடல்கள் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த அகழிப் பகுதிகளில்ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், இந்த கடும் சண்டையில் 120 சிங்களச்சிப்பாய்கள் படுகாயமும் அடைந்தனர். பலியான சிப்பாய்களின் உடல்களைவிடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.
இதேபோல் அறிவியல் நகர் என்ற இடத்தில் சிங்கள ராணுவத்தின் மீதுவிடுதலைப்புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் 29 சிப்பாய்கள்கொல்லப்பட்டனர். இங்கு 60 க்கும் மேற்பட்ட சிங்களச் சிப்பாய்கள்படுகாயமடைந்தனர். இன்னொரு தாக்குதலில் சிங்களச் சிப்பாய் ஒருவர்கொல்லப்பட்டார். 180 ராணுவ வீரர்கள் மோசமாகக் காயமடைந்தனர்.
பின் வாங்கி ஓட்டம்
கடுமையான சேதத்திற்குப் பின் இலங்கை ராணுவம் சண்டையை நிறுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக பின்வாங்கிச் சென்றது.
சண்டை நடந்த இடங்களில் இருந்து ஏ.கே. ரக எந்திர துப்பாக்கிகள், பி.கே.ரகஎந்திர துப்பாக்கிகள், டி.56 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமானவெடிமருந்துகளையும் விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்திடமிருந்துகைப்பற்றினார்கள்.
ராணுவம் மறுப்பு
கிளிநொச்சி அருகே நடந்த சண்டையில் சிங்களச் சிப்பாய்கள் 90 பேர்கொல்லப்பட்டதாகவும், 180 பேர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள்தங்களது இணையதளத்தில் அறிவித்துள்ளனர். இதேபோல் ராணுவம் பின்வாங்கி ஓடும் புகைப்படக்காட்சியையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
விமானங்கள் குண்டு வீச்சு
இதனிடையே கிளிநொச்சியின் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இலங்கைபோர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தின. ராணுவம் முன்னேறிச் செல்லும் விதமாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதுஇந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. இழப்புபற்றிபொன்சேகா ஒப்புதல்
விடுதலைப்புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான்படைத்தரப்பு அதிகம் இழப்புகளை சந்தித்து வருகின்றது.
மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில்ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளால் சூழப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை வெல்வது என்பது இலகுவான நடவடிக்கை அல்ல என்றுசிறீலங்காவின் தரைப்படைத் தளபதி பொன்சேகா பிசினஸ் டுடே இதழுக்குஅளித்துள்ள பேட்டியில் கூறி, தோல்வி ஏற்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்
tamilnadu tamilan
rsankar
http://www.youtube.com/watch?v=uXmAE97CdTc