மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்


மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது. 

அதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல்  அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும்.  எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன். 
 
மயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. 
 
அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை. 
 
நான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன். 
 
மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை