மீண்டும் மீண்டும் சிரிப்பு

"டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...''

"ஏன்''

"சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''


*************


உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு?

ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.


*************


பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

மாணவர்கள்: ஏன் பெருசு?...

பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...


*************


மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்

சுமதி: ஏன்?..

மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.


*************


"அவர் சாமி...உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க?...''

"சாமியார் பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்''.


*************


(செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)

ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..


*************

நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!

நண்பர்-2: ஏன்,என்னாச்சு?

நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.

கருத்துகள்

கலையரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹா.. ஹா.. ஹா
ஆறகளூர் பொன்.வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க கலையரசன் தாங்கள் சிரிபுக்கு
நன்றி...!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்