நகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே

விபத்து நடந்த இடத்தில்,

நபர் : "என்னுடைய ஒரு கை போச்சே.."

ஜோ : "கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா? அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்?!"

*****

ஆஸ்பத்திரியில்,

டாக்டர் : "இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன?"

நோயாளி : "ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்."

*****

ராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது.

கோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க!” என்றார்.

*****

துணிக்கடையில்,

ஜோ : "நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க."

கடைக்காரர் : "ப்ளைன்ல பார்க்கிறீங்களா?"

ஜோ : "ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க

கருத்துகள்

கார்க்கிபவா இவ்வாறு கூறியுள்ளார்…
கிகிகி..சிரிக்க வச்சது ஜொக்குகள்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்