தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள் . முதன் முதலில் வருண அமைப்பை எதிர்த்து சமத் துவத் தொண்டு செய்த போராட்ட முன்னோடிகளில் புத்தர், மகாவீரர் ஆகியோர் சத்திரிய குல தத்துவ ஞானி களாவர். ஸ்மிருத காலத்து தரும சாஸ்திரங்களில் (அதா வது கி.மு. 500) சத்திரியர்கள் பாடம் கற்பிக்கலாம் என உள்ளது. அவர்களுடைய போதனைகள், அவற்றை பின்பற்றும் மக்கள் பிரிவை இந்து மதத்திற்கு மாறாக அறிவு மதமான பவுத்த மத மாக, மார்க்கமாக தோற்று வித்தனர். அந்த மதத்தில் மனிதர்களுக்குள் பேதம் காணப்படவில்லை எனலாம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் (கிட்டத்தட்ட 2040 வருடங்களுக்கு முன்) எந்த இடத்திலும் ஜாதி, கடவுள் குறிப்பிடப்பட வில்லை. பிறப்பைக் கூட தொழிலின் அடிப்படையில் என்பதில்கூட திருவள்ளு வருக்கு உடன்பாடில்லை என்பதற்கு சான்றாக, பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை அதிகாரம் குறள் - 972). என்னும் குறள
ரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன். வெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். விழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி: "என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்த
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி : தமிழர் தலைவர் தலைமையில் தனித்தன்மையோடு மருந்தியல் துறையில் மகத்தான சாதனை! பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் கீழ் இயங்கும், பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியானது சமூக சீர்திருத்த சிற்பி பெரியார் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையே மூச்சாகக் கருதும் நிறுவனர் தமிழர் தலைவர் டாக்டர்.கி.வீரமணி அய்யா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்காக இந்நாட்டில் முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இம் மருந்தியல் கல்லூரி தொடர்ந்து 25 ஆண்டுகள் சாதனை புரிந்து இன்று வெள்ளி விழா கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இயற்கை எழில் நிறைந்த சூழலில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் திருச்சிராப்பள்ளியின்
கருத்துகள்